மேலும் அறிய

வாஷிங்டனுக்கு இணையான வசதிகள்.. பிராட்வே பேருந்து நிலையத்தில் எப்போது தொடங்கும் புனரமைப்பு பணிகள்?

பிராட்வேயில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (Broadway New Bus Stand) அமைக்கப்படும் என கடந்த 2024ஆம் ஆண்டு, அறிவிப்பு வெளியாகியிருந்தது. நிலம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, புனரமைப்பு பணிகள் தொடங்கும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Broadway Bus Stand Revamp: சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) புனரமைத்து வரும் நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் ஒப்புதல் பெறப்பட்ட பிராட்வே பேருந்து நிலையத்தின் புனரமைப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. வாஷிங்டனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் பிராட்வேயில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (Broadway New Bus Stand) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அடுத்த கட்டத்திற்கு செல்லும் சென்னை:

மும்பை, டெல்லி, கொல்கத்தாவுக்கு பிறகு முக்கிய நகரமாக கருதப்படுவது சென்னை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்ற சென்னை, தென்னிந்தியாவின் பொருளாதார மையமாக திகழ்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைத்த பிறகு, சென்னையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

822.7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள்:

அந்த வகையில், நகரின் பல்வேறு பேருந்து நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் (North Chennai Development Plan) கீழ், 822.7 கோடி ரூபாய் மதிப்பில் பிராட்வேயில் பழைய பேருந்து நிலையத்திற்கு பதிலாக பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பிராட்வேயில் பேருந்து நிலையத்தை புனரமைப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்திடமிருந்து 200 கோடி ரூபாயும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் (CMDA) இருந்து 115 கோடி ரூபாயும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (TUFIDCO) 506 கோடி ரூபாயும் வழங்க உள்ளது.

பழைய பிராட்வே பேருந்து நிலையம் - Old Broadway bus Stand:

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் பிராட்வே பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி, கடந்த 1957ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிராட்வேயில் கொஞ்சம் கொஞ்சமாக வசதிகள் வர தொடங்கிய பிறகு, நகரின் முக்கிய பொருளாதார மண்டலமாக பிராட்வே உருவானது. இதையடுத்து, எஸ்பிளனேடு சாலை அருகே பிராட்வே புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பேச்சுகள் தொடங்கி இருக்கின்றன. கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பு வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்துதான் இயக்கப்பட்டிருக்கிறது.  தற்போது, அதே இடத்தில்தான் பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. 

காலப்போக்கில் இட நெருக்கடியாலும் ஆக்கிரமிப்புகளாலும் ஒரு பேருந்து நிலையம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது பிராட்வே பேருந்து நிலையம். இதையடுத்து, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப பிராட்வே பேருந்து நிலையம் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வசதிகள்- New Broadway bus Stand Facilities:

குறளகம் வளாகத்தையொட்டி வர உள்ள பிராட்வே புதிய பேருந்து நிலையம், 10 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இரண்டு பேஸ்மெண்ட்களிலும் இரண்டு தளங்கலிலும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 6 தளங்களில் வணிக வளாகங்கள் வர இருக்கின்றன. தோராயமாக 1,100 பேருந்துகளை நிறுத்தும் வகையில் புதிய பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட உள்ளது. மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் நிலையங்களுக்கு தங்கு தடையின்றி செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைய உள்ளது.

பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏதுவாக பல நுழைவாயிகள் மற்றும் வெளியேறும் வழிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் நிற்பதற்காக தனி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. 700 கார்கள் மற்றும் 800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் அமைய உள்ளது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது. NSC போஸ் சாலையைக் கடக்கும் வசதி மற்றும் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் கட்டப்பட உள்ளது. 

எப்போது தொடங்கும் புனரமைப்பு பணிகள்:

பிராட்வேயில் பேருந்து நிலையம் புனரமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சர் பி. கே. சேகர் பாபு, கடந்த 2024ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அறிவிப்பு வெளியாகி 7 மாதங்களுக்கு பிறகும், எந்த விதமான பணிகளும் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) இன்னும் நிலத்தை தரவில்லை. அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. நிலம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, புனரமைப்பு பணிகள் தொடங்கும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget