மேலும் அறிய

Ponmudi Speech: இந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி விற்கிறார்கள்.. அமைச்சர் பொன்முடி பேச்சு

நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் ஆனால் அந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நெடும் காலமாக மோதல் போக்கு நீண்டு வரும் நிலையில் இன்று ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் கலந்துகொண்டார். 

கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''இந்தியாவின் உயர் கல்வியில் 53 சதவீதமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் இந்தக் கல்வி ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குடும்பத் தலைவிகள் தன் மகள்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது.

இதுதான் திராவிட மாடல். இதுதான் பெரியார் தோன்றிய மண். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு. எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளோம்.

நானும் இஸ்ரோ தலைவர் சிவனும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து முன்னேறியவர்கள். கன்னியாகுமரியில் படித்த சிவனும் விழுப்புரத்தில் பிடித்த நானும் முன்னேறியுள்ளோம். சிவம் அரசுப் பள்ளியில் படித்து, அகில இந்திய அளவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். நான் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன்.

இந்திக்கு எதிரானவர்கள் அல்ல

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. யாரெல்லாம் இந்தி படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்தியைப் படிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தி விருப்ப மொழியாக இருக்கலாம். ஆனால் கட்டாய மொழியாக இருக்கக்கூடாது. சர்வதேசத் தொடர்புக்கு ஆங்கிலமும், உள்ளூருக்குத் தமிழும் உள்ளது. இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களைப் பின்பற்றத் தயாராக உள்ளோம். இருமொழிக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றுவோம்''. 

இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget