மேலும் அறிய

திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி

பெரியார் சிலை மீது செருப்பில் அடிப்பேன் என்பதை ஏற்க மாட்டோம் - அண்ணாமலை

திருபரங்குன்றம் சரிந்திரம் சேகர்பாபுவிற்கு தெரியுமா பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை  விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


திருபரங்குன்றம் சரிந்திரம் சேகர்பாபுவிற்கு தெரியுமா. 1926ம் ஆண்டு இதே பிரச்சனை வந்த போது அங்கிருந்த சப்- ஜட்ஜ் தீர்ப்பு தருகிறார். திருப்பரங்குன்றம் கோவில் எந்த சந்தேகமின்றி தேவதானஸ்த்திற்கு சொந்தமானது. அரசு நிலங்கள் அரசுக்கு சொந்தமானது. 1926ம் ஆண்டு தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அது முழுக்க கோவிலுக்கு சொந்தமானது. அப்போது அப்பீலுக்கு சென்ற போது 2 தரப்பினரும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. 1931ல் பிரீவ் கவுன்சில் சப்-ஜட்ஜ் தீர்ப்பை ஏற்கப்படுவதாக கூறி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கோவில் பாறைகளை உடைக்கும் போது  தடுக்கின்றனர். ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை திராவிட கும்பல் திமுக அதை கொடுக்க தயாராக இருக்கிறது. சேகர்பாபு 1931ல் தரப்பட்ட தீர்ப்பை படிக்க வேண்டும். புதிதாக இன்னொரு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சனையை ஆரம்பிக்கின்றனர். ஆடு எடுத்து சென்று சாப்பிடுகின்றனர். ஒரு எம்.பி மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. சேகர்பாபு வீர வசனம் பேசுகிறார். இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் அடக்குன லட்சணத்தை பார்த்தோம். பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் தவறு செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல்துறையை பா.ஜ.க.வை சேர்ந்த 350 இடங்களில் நள்ளிரவில் வீட்டில் கைது செய்து வைத்து உள்ளனர். அந்தந்த ஊரில் உள்ள பா.ஜ.க. தலைவரை வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள். 350 இடங்களில் பா.ஜ.க. வினரை கைது செய்து வைத்த தமிழக முதலமைச்சருக்கும் போலீசாருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கைது செய்து மக்கள் நாயகர்களாக மாற்றி வருகின்றனர். 

மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில் மக்கள் எழுச்சியாக வந்து உள்ளனர். சேகர்பாபு சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். காவி வேட்டி கட்டி கொண்டு முருக பக்தன், சிவ பக்தன் என்று சொல்லி கொண்டு இருக்கக்கூடாது. சனாதன தர்மம் இந்து தர்மம் வேறு இல்லை. இஸ்லாமியர்கள் சகோதரர்கள் தான். இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்த பிரச்சனையை ஏற்படுத்தியது யார்? இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என சீன் போட்டு சுற்றினால் உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அடக்கி காட்டுவோம். ரகுபதி வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். எத்தனை நாளைக்கு அமைச்சர்களாக இருப்பீர்கள். நாளை காலை வரை அமைச்சராக இருக்க முடியுமா எப்படி அடக்க வேண்டும் என்பதை நாங்கள் செய்து காட்டுவோம். மக்கள் பிரதிநிதியாக இருப்பதால் மரியாதை தருகிறோம். பேசுகின்ற வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும். தப்பு செய்தவர்களா கஞ்சா விற்றவர்களா பெண்கள் மீது கை வைத்தவர்களா திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களாக கோர்ட்டு அனுமதி தந்த பின் சேர்ந்தவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்குவீர்கள்.

லோக் சபாவில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் தமிழகத்தில் போதை பொருள் விற்றதாக 2021ம் ஆண்டில் 9632 பேர் மீது வழக்கு, 2022ம் ஆண்டு 588 வழக்கு 2023ம் ஆண்டு 421 வழக்கு 2024ம் ஆண்டு 113 வழக்கு போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. வெட்கமாக இல்லையா ஒரு ஆண்டில் 9632 வழக்குகளும் 3 ஆண்டுகள் 1122 வழக்குகள் தான். எப்படி கஞ்சா விற்பனை கட்டுப்படுத்துவீர்கள். கஞ்சாவின் தலை நகரமாக தமிழகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த காவல் துறையை பயன்படுத்த வேண்டுமா அதை விட்டு 350 இடங்களில் பா.ஜ.க. வீடுகளில் உள்ளது. அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு வீர வ்சனம் பேசுகின்றனர். இரும்பு கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். பொறுத்து கொண்டு இருக்கிறோம். கோர்ட்டு அனுமதி தந்த வழியில் நடக்கிறது. இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என மிரட்ட பார்த்தீர்கள் என்றால் ரகுபதி இருக்கும் இடம் அவருக்கே தெரியாது. மிரட்ட உருட்டல் திமுக கரை வேட்டிகளிடம் சொல்லி கொள்ளுங்கள். அவ்வளவு பேர் கூடினார்களா பஸ்சை உடைத்தார்களா தீவைத்து கொளுத்தினார்களா பொது சொத்துக்கு சேதம் விளைவித்தார்களா அமைதியான முறையில் பேசி விட்டு சென்று உள்ளனர். பிரச்சனையை உருவாக்குவது திமுக. நவாஸ் கனி அங்கு செல்ல என்ன உரிமை இருக்கிறது. அங்கு மாமிசம் சாப்பிட என்ன உரிமை இருக்கிறது. அவரை கைது செய்தீர்களா மைனாரிட்டி ஒட்டு வேண்டும் என்பதற்காக அக்கறை சொல்ல கூடிய திமுக அமைதியான முறையில் இந்து பக்தர்கள் வந்தால் கை வைக்கிறீகள். காவல் துறையை போதை தடுக்க அனுப்புங்கள். 

தமிழகத்தில் நேற்றைய விட இன்று என கோரமா இருக்கும் நாளை என்ன கோரமா இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆட்டோவில் பெண்ணை கடத்தி செல்வதை பார்த்த ஒரு நபர் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் சொல்லி மீட்க வேண்டி உள்ளது. சென்னையில் அதிகமான போலீஸ், ரோந்து போலீஸ், பிங்க் வாகனம் கட்டுப்படுத்த முடியாமல் பொதுமக்கள் தந்த தகவலின் பேரில் பிடிக்க முடிவதை பார்த்து ரகுபதி, சேகர்பாபு வெட்கப்பட வேண்டும். முருக பக்தர்களை பார்த்து இரும்பு கரம் கொண்டு அடக்கும் முன் குற்றங்களை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியதானே இந்துக்கள் மீது தான் இரும்பு கரம் மற்றவர்கள் மீது அல்ல. மற்றவர்கள் ஒட்டு அப்படி போட மாட்டார்கள். இந்துக்கள் பிரித்து போடுவார்கள் என்பதால் அவமானப்படுத்தலாம். எழுச்சி என்பது ஆரம்பம் தான். வருங்காலத்தில் திமுகவிற்கு தக்க பதிலடி தந்து பாடம் புகட்டப்படும். பெரியார் சிலை மீது செருப்பில் அடிப்பேன் என்பதை ஏற்க மாட்டோம். சிலர் ஏற்பார்கள். சிலர் எதிர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Udumalpet Power Cut (5-01-2026): உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Embed widget