மேலும் அறிய

’ஈசிஆரில் மது போதை ஆசாமிகளால் கலவரமான கல்யாணம்’ - கொதித்தெழுந்த ஊர்மக்களால் பரபரப்பு...!

’’சாலையின் குறுக்கே வாகனத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போதை கும்பல் வழிவிடாமல் இருந்துள்ளனர்’’

சென்னை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், நேற்று காலை பண்ணை வீடு ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பண்ணை வீட்டில் நடைபெற்ற திருமண விழாவிற்கு மணமக்களை வாழ்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர்.

’ஈசிஆரில் மது போதை ஆசாமிகளால் கலவரமான கல்யாணம்’ - கொதித்தெழுந்த ஊர்மக்களால் பரபரப்பு...!
 
அவ்வாறு அந்த திருமண விழாவுக்கும் வந்த, திருமண ஜோடிகளின் நண்பர்கள் சிலர், பண்ணை வீட்டின் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு பகுதியில், குறுக்கே காரை நிறுத்தி மது அருந்தியதாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் அவ்வழியாக தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியை சேர்ந்த கவின் என்பவர் சென்றுள்ளார். அப்பொழுது கவின், சாலையின் குறுக்கே வாகனத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த, மதுபோதை கும்பலிடம் வழி விட சொல்லி உள்ளார்.  அவ்வாறு வழிவிடசொன்னபோது காரில் இருந்த மது போதை கும்பல் வழிவிடாமல் இருந்துள்ளனர். இதனால் கவினுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

’ஈசிஆரில் மது போதை ஆசாமிகளால் கலவரமான கல்யாணம்’ - கொதித்தெழுந்த ஊர்மக்களால் பரபரப்பு...!
 
 
இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை கும்பல், கவினை தாக்கியுள்ளனர். கவினை தாக்குவதை கண்ட ஊர் மக்கள், பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இச்சம்பவம் இருதரப்புக்கு இடையே கடும் மோதலாக மாறிய நிலையில், இருசக்கர வாகனம் மற்றும் 2 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருட்களை மாறி மாறி எடுத்து தாக்கியுள்ளனர். செங்கல், மரக்கட்டைகள், கற்கள் உள்ளிட்ட பொருட்களால் மாறிமாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.

’ஈசிஆரில் மது போதை ஆசாமிகளால் கலவரமான கல்யாணம்’ - கொதித்தெழுந்த ஊர்மக்களால் பரபரப்பு...!
 
 
இரு தரப்பினருக்கும் நடைபெற்ற மோதலில்  சுரேந்தர் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவினுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

’ஈசிஆரில் மது போதை ஆசாமிகளால் கலவரமான கல்யாணம்’ - கொதித்தெழுந்த ஊர்மக்களால் பரபரப்பு...!
 
இந்த சம்பவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் எந்தவித, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பனையூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget