மேலும் அறிய

சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

கரைக்கு திரும்புவதற்காக தேசப்பன்  ஜி.பி.ஆர்.எஸ் கருவியை இயக்கி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இவர் கையில் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ்  மூலம் மின்னல் தாக்கி உள்ளது. 

சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகர் 4 ஆவது தெருவை சேர்ந்தவர் தேசப்பன் வயது 40 இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இவரது படகில் கோவிந்தராஜ் தமிழரசன் தியாகராஜன் என்ற மூன்று பேரும் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதிகாலையில் மழை பெய்துகொண்டிருந்த போது 8:00 மணி அளவில் கரைக்கு திரும்புவதற்காக தேசப்பன்  ஜி.பி.ஆர்.எஸ் கருவியை இயக்கி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இவர் கையில் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ்  மூலம் மின்னல் தாக்கி உள்ளது. 

சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
 
இதனால் கை தலை பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது இதனால் மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார் உடனே விரைவாக படகை கரைக்கு கொண்டு வந்தனர் இது சம்பந்தமாக  மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்து வந்தனர். கரைக்கு வந்த போது தேசப்பன் இறந்து விட்டதாக தெரிந்ததால் அவரது உடலை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்  இறந்துபோன தேசப்பனுக்கு பபிதா என்ற மனைவியும் லட்சுமி பிரியா வயது 14 அர்ஜுன் வயது 12 என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 

சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
 
மின்னல் தாக்கி இறந்தது குறித்து மீனவர்களிடையே  குழப்பங்கள் உள்ளது. ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் மின்னல் அதிர்வலை கதிர்வீச்சு வருமா என கேள்வி எழுப்பப்படுகிறது ஆனால் மழை நேரங்களில் செல்போன்களில் இருப்பது போன்ற கதிர்வீச்சு ஜி.பி.ஆர்.எஸ் கருவியில் இருப்பதால் மின்னல் தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மீன்வளத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர் மழைக்காலங்களில் இந்த கருவியை பாதுகாப்பாக பயன்படுத்தும் எப்படி என்பது குறித்து மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
கொடுங்கையூர் அருகே பால் டெலிவரிக்கு சென்ற இளைஞரை கத்தியால் தாக்கி நகை, பணம் பறிப்பு - 3 இளைஞர்கள் கைது 
 
சென்னை வேளச்சேரி விஜயா நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (25). சொந்தமாக  மினி வேன் வைத்து பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதிகாலை 3 மணி அளவில் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்ய கொடுங்கையூர் எழில் நகர் வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது எழில் நகர் பகுதியில் ரயில்வே கேட் மூடப் பட்டிருந்ததால் அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் மினி வேன் கண்ணாடிகளை உடைத்து உள்ளே அமர்ந்திருந்த பாலாஜியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பாலாஜிக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாலாஜி வைத்திருந்த 35,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்றனர். பாலாஜி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
 
அவ்வழியாக சென்றவர்கள் அவரை பார்த்து உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இதில் சம்பவத்தில் ஈடுபட்டது ஏற்கனவே சில குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குப்பை மேடு அருகே பதுங்கியிருந்த கொருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (22) , அதே பகுதியைச் சேர்ந்த  ஜெயராம் (19) , புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (எ) துப்பாக்கி (20) ஆகியோரை கைது செய்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget