மேலும் அறிய

சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

கரைக்கு திரும்புவதற்காக தேசப்பன்  ஜி.பி.ஆர்.எஸ் கருவியை இயக்கி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இவர் கையில் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ்  மூலம் மின்னல் தாக்கி உள்ளது. 

சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகர் 4 ஆவது தெருவை சேர்ந்தவர் தேசப்பன் வயது 40 இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இவரது படகில் கோவிந்தராஜ் தமிழரசன் தியாகராஜன் என்ற மூன்று பேரும் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதிகாலையில் மழை பெய்துகொண்டிருந்த போது 8:00 மணி அளவில் கரைக்கு திரும்புவதற்காக தேசப்பன்  ஜி.பி.ஆர்.எஸ் கருவியை இயக்கி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இவர் கையில் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ்  மூலம் மின்னல் தாக்கி உள்ளது. 

சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
 
இதனால் கை தலை பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது இதனால் மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார் உடனே விரைவாக படகை கரைக்கு கொண்டு வந்தனர் இது சம்பந்தமாக  மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்து வந்தனர். கரைக்கு வந்த போது தேசப்பன் இறந்து விட்டதாக தெரிந்ததால் அவரது உடலை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்  இறந்துபோன தேசப்பனுக்கு பபிதா என்ற மனைவியும் லட்சுமி பிரியா வயது 14 அர்ஜுன் வயது 12 என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 

சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
 
மின்னல் தாக்கி இறந்தது குறித்து மீனவர்களிடையே  குழப்பங்கள் உள்ளது. ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் மின்னல் அதிர்வலை கதிர்வீச்சு வருமா என கேள்வி எழுப்பப்படுகிறது ஆனால் மழை நேரங்களில் செல்போன்களில் இருப்பது போன்ற கதிர்வீச்சு ஜி.பி.ஆர்.எஸ் கருவியில் இருப்பதால் மின்னல் தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மீன்வளத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர் மழைக்காலங்களில் இந்த கருவியை பாதுகாப்பாக பயன்படுத்தும் எப்படி என்பது குறித்து மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
கொடுங்கையூர் அருகே பால் டெலிவரிக்கு சென்ற இளைஞரை கத்தியால் தாக்கி நகை, பணம் பறிப்பு - 3 இளைஞர்கள் கைது 
 
சென்னை வேளச்சேரி விஜயா நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (25). சொந்தமாக  மினி வேன் வைத்து பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதிகாலை 3 மணி அளவில் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்ய கொடுங்கையூர் எழில் நகர் வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது எழில் நகர் பகுதியில் ரயில்வே கேட் மூடப் பட்டிருந்ததால் அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் மினி வேன் கண்ணாடிகளை உடைத்து உள்ளே அமர்ந்திருந்த பாலாஜியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பாலாஜிக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாலாஜி வைத்திருந்த 35,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்றனர். பாலாஜி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
 
அவ்வழியாக சென்றவர்கள் அவரை பார்த்து உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இதில் சம்பவத்தில் ஈடுபட்டது ஏற்கனவே சில குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குப்பை மேடு அருகே பதுங்கியிருந்த கொருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (22) , அதே பகுதியைச் சேர்ந்த  ஜெயராம் (19) , புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (எ) துப்பாக்கி (20) ஆகியோரை கைது செய்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Aadi Amavasai 2025: இன்று ஆடி அமாவாசை.. புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! கடலென திரண்ட பக்தர்கள்
Aadi Amavasai 2025: இன்று ஆடி அமாவாசை.. புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! கடலென திரண்ட பக்தர்கள்
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Aadi Amavasai 2025: இன்று ஆடி அமாவாசை.. புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! கடலென திரண்ட பக்தர்கள்
Aadi Amavasai 2025: இன்று ஆடி அமாவாசை.. புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! கடலென திரண்ட பக்தர்கள்
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Embed widget