Chennai Corporation | மெரினா கடற்கரையில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி
மெரினா கடற்கரையில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் புதிய விற்பனையாளர்கள் கடைகள் திறக்கவும், அவர்களுக்கு ஸ்மார்ட் வண்டிகளை விநியோகிக்கவும் சென்னை கார்ப்பரேஷன் முடிவு செய்தது. இதற்காக 27 கோடி ரூபாய் செலவில் சுமார் 900 கடைகள் அமைக்கப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. தற்போது புதிய கடைகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 900 வண்டிகளில் குறைந்தது 60 சதவிகிதம் கடற்கரையில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் மீதமுள்ள ஸ்மார்ட் கடைகள் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்த கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களை கார்ப்பரேஷன் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி பெறத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 15 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 18-ஆம் தேதி விண்ணப்பங்கள் இறுதிசெய்யப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
சென்னை #மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு 27 கோடி ரூபாய் செலவில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என @chennaicorp தெரிவித்திருந்தது. தற்போது புதிய கடைகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது pic.twitter.com/gMzLK5cy82
— Stalin SP (@Stalin__SP) June 12, 2021
இந்த திட்டம் புதிதாக தொழில் துவங்குவோருக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் சட்டவிரோதமாக மெரினாவில் கடை நடத்துபவர்களை எளிதில் கண்டறியமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியின் தரவுகளின்படி, மெரினாவில் சட்டவிரோத விற்பனையாளர்களின் எண்ணிக்கை 2,500-க்கும் அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















