2026 தேர்தல் ; காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் !! செல்வப் பெருந்தகை பேச்சு
வருகின்ற 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக காங்கிரஸ் கட்சி இருக்கும் - செல்வ பெருந்தகை

சேவாதள அணிவகுப்பு
77 - வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சேவா தள மாநில தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமையில் சேவாதள அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் , கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா சொர்ணா சேதுராமன், மாநில அமைப்பைச் செயலாளர் ராம் மோகன்,சென்னை மாவட்ட தலைவர்கள் டில்லி பாபு, ஜோதி பொன்னம்பலம், திலகர்,விஜய சேகர், மாநில பொது செயலாளர்கள் செல்வம்,எஸ் ஏ வாசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசிய போது ;
பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றிணைந்த நாடாக இருக்கும் பொழுது லாகூரில் நடந்த மாநாட்டில் ஒரு முழக்கம் பிரகடப்படுத்தப்பட்டது அந்த முழக்கம் தான் பூரண சுயராஜ் என்பது. ஜனவரி 26 ஆம் தேதி வருட வருடம் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது
காங்கிரஸ் பேரியக்கத்துடைய மாநாட்டில் தீர்மானத்தின்படி ஜனவரி 26 குடியரசாக நாம் பிரகடனப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அன்று நாம் குடியரசாக பரிணாமம் பெற்றோம். இது தான் இந்த குடியரசு தினத்தினுடைய வரலாறு.
நம்முடைய தியாக தீபங்களாக தியாக சுடராக இருக்கின்ற காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் இந்த தேசத்திற்கு விடுதலையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் இயற்றி கொடுத்தார்கள். ஆனால் இன்று அந்த சுதந்திரம் சிதைக்கப்படுகிறது பாஜக ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்படுகிறது என்பது தான் மிகப் பெரிய வேதனை.
பாஜகவினர் வரலாறு படிக்க வேண்டும்
யாரெல்லாம் இந்த தேசத்தை நேசிக்கிறார்களோ யாரெல்லாம் இந்திய மண்ணை நேசிக்கிறார்களோ அவர்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்கும் பொழுது காங்கிரஸ் பேரியக்கத்துடைய தலைவர்கள் இல்லாமல் இந்த நாடு விடுதலை அடையவில்லை காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்கவில்லை. காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் இல்லாமல் இந்த நாடு ரிபப்ளிக் ஆப் இந்தியா ஆகவில்லை. ஆகவே இன்றைய இளைஞர்களுக்கு இதையெல்லாம் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பாஜக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை கொச்சைப்படுத்தி வருகின்றது. பாஜகவினர் முதலில் வரலாறு படிக்க வேண்டும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த தேசத்தின் வரலாறு படிக்க வேண்டும்
எந்த வித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையை பெற்று தந்தார். அகிம்சை முறையில் யாத்திரை பேரணிகள் நடத்தி மகாத்மா காந்தியடிகள் போராடியதைக் பிரிட்டிஷ்காரர்களை கலங்கடிக்க செய்தது
இதையெல்லாம் தெரியாத பாஜக அரசும் பாஜக தலைவர்களும் மோடியும் வரலாறுகள் தெரியாமல் வரலாற்று குறிப்புகளை செய்து வருகின்றார்கள்
காங்கிரஸ் தீர்மானிக்கின்ற கட்சி தான் ஆட்சியில் அமரும்
இந்த குடியரசு தினத்தில் நாம் சபதம் ஏற்போம் வருகின்ற 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கின்ற சக்தியாக காங்கிரஸ் கட்சி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கின்றோம்
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றோம்.
சென்னை கன்னியாகுமரி கோவை திருச்சி உள்ளிட்ட பல மண்டலங்களை உருவாக்கி மண்டலங்கள் வாரியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றோம்.























