மேலும் அறிய

Kilambakkam: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; தேதியை குறித்த முதலமைச்சர் - எப்போது திறப்பு?

kalaignar centenary bus terminus: மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற நிலையிலே மக்களுக்கு இந்த பேருந்து நிலையம் தமிழக முதல்வர்  திறந்து   வைக்க உள்ளதாக தெரிவித்தார்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் - kalaignar centenary bus terminus 

 
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கக்கூடிய தென் மாவட்ட பேருந்துகளால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக, திறப்பு விழா பல்வேறு காரணங்களால் தள்ளிப் போயிட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். திறப்பு விழாவிற்கு எங்கு மேடை அமைக்கப்பட வேண்டும், பேருந்து முனையும் திறப்பு விழா கல்வெட்டு அமைக்கப்படும் இடம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், கலைஞர் சிலை அமைக்கப்பட இருக்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். அதேபோன்று நிறைவடைந்துள்ள மழை நீர் வடிகால் பணியையும் ஆய்வு மேற்கொண்டனர்.

Kilambakkam: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; தேதியை குறித்த முதலமைச்சர் - எப்போது திறப்பு?
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது :
 
வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக,  தமிழக முதல்வர் தொடர்ந்து பணிகள் குறித்த முன்னேற்றத்தை கேட்டு அறிந்து வருகிறார். கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் முனையம் அனைத்து, பணிகளும் நிறைவுற்று வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 86 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்திருக்கின்றது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துகின்ற முயற்சி முழுமை பெற்று இருக்கின்றது . இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த பேருந்து நிலையம் திறக்கின்ற சூழ்நிலை இருந்தும், தள்ளி போனதற்கான காரணம் மழை காலங்களில், பெருமளவு தண்ணீர் தேங்கி நின்றது. 1200 மீட்டர் அளவிற்கு மழை நீர் வடிகால் அமைப்பு பணி நடந்தது அந்த பணி தற்போது நிறைவுற்றிருக்கின்றது.
Kilambakkam: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; தேதியை குறித்த முதலமைச்சர் - எப்போது திறப்பு?
 
பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் , 2310 பேருந்துகள் தினம் தோறும் அதில் 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் உள்ளடக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். அப்படி வருகின்ற மக்களுக்கு தேவையான உணவு வசதி, அதே போல் திடீரென்று உடலில் குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு உண்டான மருத்துவ சிகிச்சை, தேவைப்படுகின்ற மருது மாத்திரைகள் வாங்குவதற்கு மருந்து கடைகள், வருகின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வு எடுப்பதற்கு ஓய்வறையில்,, அதேபோல் உணவகங்கள் தீயணைப்பு வாகனங்கள் குடிநீர் வசதி கழிப்பறை வசதி. பெட்ரோல் மற்றும் டீசல்  நிலையங்கள். காவல் நிலையம் அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 

தமிழ் புத்தாண்டு ( தை 1 ) (kilambakkam bus terminus opening date )

 
பிறக்கின்ற புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கின்ற வகையில் திறப்பு விழா அமையும். பிறக்கின்ற புத்தாண்டில் அதாவது தமிழ் புத்தாண்டில் ( தை 1 ) இந்த பேருந்து நிலையத்தை மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற நிலையிலே மக்களுக்கு இந்த பேருந்து நிலையம் தமிழக முதல்வர்  திறந்து   வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

Kilambakkam: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; தேதியை குறித்த முதலமைச்சர் - எப்போது திறப்பு?
 
திமுக அரசு தென் மாவட்டங்களை வஞ்சிப்பதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், முதலில் பாண்டிச்சேரி கவர்னர் வேலையை, அவர்களை பார்க்க சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை பார்க்க சொல்லுங்கள். 

தமிழிசை - விமர்சனம்

 
அவர்களுடைய எதிர்கால திட்டம் தமிழகத்தில் எங்கேயாவது நாடாளுமன்ற தொகுதியில் நின்று போட்டியிட வேண்டும்., நிச்சயமாக எங்கே போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழக மக்கள் தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள், மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். எனவே பாண்டிச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கான பணியை மேற்கொள்ள கொள்ள வேண்டும் அதுதான் நல்லது என தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Breaking News LIVE: கொடநாடு வழக்கில் 268 பேரிடம் விசாரணை - சட்டசபையில் முதலமைச்சர்
Breaking News LIVE: கொடநாடு வழக்கில் 268 பேரிடம் விசாரணை - சட்டசபையில் முதலமைச்சர்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Embed widget