மேலும் அறிய

Covishield Vaccine: 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு!

தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவுகிறது, அதனால் ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது அதனால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் "மே மாதம் தமிழகம் வர வேண்டிய 1.74 லட்சம் தடுப்பூசியை தற்போது வரை மத்திய அரசிடமிருந்து வரவில்லை, 4.94 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளது, இது விரைவில் முடிந்து விடும் என்பதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும், அதனால் ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் தமிழக்தில் நிறுத்தப்பட உள்ளதாக" தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆரம்ப கால கட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் இருந்தாலும், தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இந்த ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்நிலையில் அது எப்போது வரும் என்பதிலும் தெளிவில்லை, அதனால் தடுப்பூசி போடும் பணியை தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோதும், இன்று மாலை வரை மட்டுமே தடுப்பூசிகள் தமிழகத்தில் கையிருப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தான் தமிழகத்திற்கு 45 வயதிற்கு மேல் உடையவர்களுக்கு போடப்படும் 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள தகவலின் படி தடுப்பூசி இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேரும். அதற்கு பிறகு இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இது வரை தமிழகத்திற்கு 96.18 லட்சம் டோஸ் தடுப்பூசி மத்திய அரசு வழங்கியுள்ளது, அதில் 92 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் 4 லட்சம் டோஸ் வீணாகியுள்ளது எனவும் தெரிகிறது. தற்போதைய நிலையில் நாள் ஒன்றிற்கு சுமார் 28000 நபர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர், சுமார் 450 நபர்கள் வரை உயிரிழக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பாதிப்பை தடுக்க கடுமையான தளர்வுகள் அற்ற ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டால் அது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு வழங்கியுள்ள 4.20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தற்போதைக்கு அடுத்த சில நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதற்குள்ளாக வர வேண்டிய அடுத்தகட்ட டோஸ்களும் சரியாக வந்து சேர வேண்டிய அவசிய நிலை தமிழகத்தில் நிலவி கொண்டு தான் இருக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
Embed widget