மேலும் அறிய

இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

’’ஒரு நாள் வங்கி செயல்படவில்லை என்றால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்படும்’’

மத்திய அரசு நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருக்கும் வங்கிகள் தனியார்மயம் மசோதாவை கைவிடவேண்டும், அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளளாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கி தொழிலை முடக்கக் கூடாது, வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தின் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 140 வங்கி கிளைகள் உள்ளன இதில் 717 வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இதில் 237 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒரு நாள் வங்கி செயல்படவில்லை என்றால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்படும்.


இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

குறிப்பாக காசோலை மற்றும் பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவை மூலமாக நேற்றும் இன்றும் மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் 600 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தினால் குக்கிராமங்களுக்கு வங்கி திட்டங்கள் சென்றடைய வாய்ப்பு மிகக் குறைவு, லாப நோக்கம் இல்லாமல் வங்கியின் திட்டங்களை கொண்டு செல்வது அரசு நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமும் தான். அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. அது மட்டுமன்றி பயிர் காப்பீடு திட்டம், மாணவர்களுக்கான கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். இதனை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை இதன் காரணமாக பெரும்பான்மையான வங்கிகள் செயல்படவில்லை வேலைநிறுத்தப் போராட்டத்தை பொருத்தமட்டில் கிளை மேலாளர் பதவிக்கு உயர்பதவி வகிப்பவர்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியாது இதனால் கிளை மேலாளர் பொறுப்பில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன கிளை மேலாளர் பதவிக்கு மேல் உயர் பதவிகளை கொண்ட வங்கிக் கிளைகளை பொறுத்தமட்டில் வழக்கம் போல் காலை 10 மணிக்கு வங்கி கிளை திறக்கப்பட்டன இருந்தபோதிலும் பணியாளர்கள் வேலைக்கு வராததால் அங்கு வங்கிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை சில இடங்களில் போராட்டத்தில் பங்கு பெறாத அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் மட்டும் வேலைக்கு வந்தனர் இது போன்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வங்கி பணியாளர்கள் வழங்க முடியாமல் திணறினர்


இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

வேலை நிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும் முதிர்வடைந்த நிரந்தர டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமலும் காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள் வியாபாரிகள் தொழிலதிபர்கள் தவித்தனர் வங்கி வேலை நிறுத்தம் குறித்து வாடிக்கையாளர்கள் வங்கி சேவைக்காக தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்றனர் அங்கு சென்ற பின்பு தான் வேலை நிறுத்தம் குறித்து தெரிந்ததால் வங்கி தொடர்பான பணிகளை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வாடிக்கையாளர்கள் திரும்பினர் இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் மேலும் வங்கி ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் மத்திய அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
சென்னை சிறுவன் விவகாரம்; தவெக அரசின் 'லா அண்ட் ஆர்டர்' லட்சணத்தைக் கிழித்த டிடிவி தினகரன்!
சென்னை சிறுவன் விவகாரம்; தவெக அரசின் 'லா அண்ட் ஆர்டர்' லட்சணத்தைக் கிழித்த டிடிவி தினகரன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget