மேலும் அறிய

இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

’’ஒரு நாள் வங்கி செயல்படவில்லை என்றால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்படும்’’

மத்திய அரசு நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருக்கும் வங்கிகள் தனியார்மயம் மசோதாவை கைவிடவேண்டும், அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளளாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கி தொழிலை முடக்கக் கூடாது, வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தின் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 140 வங்கி கிளைகள் உள்ளன இதில் 717 வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இதில் 237 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒரு நாள் வங்கி செயல்படவில்லை என்றால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்படும்.


இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

குறிப்பாக காசோலை மற்றும் பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவை மூலமாக நேற்றும் இன்றும் மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் 600 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தினால் குக்கிராமங்களுக்கு வங்கி திட்டங்கள் சென்றடைய வாய்ப்பு மிகக் குறைவு, லாப நோக்கம் இல்லாமல் வங்கியின் திட்டங்களை கொண்டு செல்வது அரசு நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமும் தான். அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. அது மட்டுமன்றி பயிர் காப்பீடு திட்டம், மாணவர்களுக்கான கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். இதனை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை இதன் காரணமாக பெரும்பான்மையான வங்கிகள் செயல்படவில்லை வேலைநிறுத்தப் போராட்டத்தை பொருத்தமட்டில் கிளை மேலாளர் பதவிக்கு உயர்பதவி வகிப்பவர்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியாது இதனால் கிளை மேலாளர் பொறுப்பில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன கிளை மேலாளர் பதவிக்கு மேல் உயர் பதவிகளை கொண்ட வங்கிக் கிளைகளை பொறுத்தமட்டில் வழக்கம் போல் காலை 10 மணிக்கு வங்கி கிளை திறக்கப்பட்டன இருந்தபோதிலும் பணியாளர்கள் வேலைக்கு வராததால் அங்கு வங்கிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை சில இடங்களில் போராட்டத்தில் பங்கு பெறாத அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் மட்டும் வேலைக்கு வந்தனர் இது போன்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வங்கி பணியாளர்கள் வழங்க முடியாமல் திணறினர்


இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

வேலை நிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும் முதிர்வடைந்த நிரந்தர டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமலும் காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள் வியாபாரிகள் தொழிலதிபர்கள் தவித்தனர் வங்கி வேலை நிறுத்தம் குறித்து வாடிக்கையாளர்கள் வங்கி சேவைக்காக தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்றனர் அங்கு சென்ற பின்பு தான் வேலை நிறுத்தம் குறித்து தெரிந்ததால் வங்கி தொடர்பான பணிகளை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வாடிக்கையாளர்கள் திரும்பினர் இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் மேலும் வங்கி ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் மத்திய அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget