மேலும் அறிய

கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை: 4 வியாபாரிகள் உரிமம் ரத்து!

ஊரடங்கின்போது காய்கறிகளை அதிகவிலைக்கு விற்ற 4 பேரின் விற்பனை அனுமதியை மாநகராட்சி ரத்து செய்ததுடன் புகார் எண்களையும் அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழ்நாடில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், முட்டை, ரொட்டி, மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே நேரில் சென்றுவிநியோகிக்க பெருநகர சென்னை மாநகராட்சி விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை மளிகை பொருட்களை விற்பனை செய்ய 4122 சில்லரை வணிகர்களுக்கும் 655 சூப்பர் மார்கெட் அங்காடிகளுக்கும் 457 மொத்த வியாபாரிகளுக்கும் என மொத்தமாக 5234 வணிகர்களுக்கு வாகன போக்குவதத்திற்கான பதாகைகள், வாகன அனுமதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை: 4 வியாபாரிகள் உரிமம் ரத்து!

விற்பனையாளர்கள் அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று விற்பனை மேற்கொள்ளவும், வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் தினசரி விற்பனை செய்யும்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து காய்கறி, பழங்கள், ரொட்டி, முட்டை ஆகியவற்றை விற்பனை செய்யவும், பொருட்களின் விலைப்பட்டியலை வாகனத்தில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டிவைக்கவும் வியாபரிகளுக்கு மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் உத்தேச சில்லரை விற்பனையைவிட அதிக  விலையில் விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அவ்வாறு விற்பனை செய்தால் மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட பதாகைகள், வாகன அனுமதி ஆகியவை பறிமுதல் செய்வதுடன் விற்பனை மேற்கொள்வது தடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெருநகர் சென்னை மாநகராட்சியால் மாதவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உத்தேச சில்லறை விற்பனை விலையைவிட அதிகவிலைக்கு விற்பனை மேற்கொண்ட 4 வியாபாரிகளிடம் இருந்து பதாகைகள்,  வாகன அனுமதி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கும் மாநகராட்சியால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கனிகள் விலை பட்டியல் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமையிடத்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள 94999 32899 என்ற கைபேசி எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுவரை இந்த கட்டுபாட்டு அறை எண்களில் இருந்து 1139 புகார்கள் பெறப்பட்டு அதன்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கவும் நியாமான விலையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் வியாபாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இனி உங்கள் பகுதியில் யாராவது கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்தால் மேலே குறிப்பிட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தலைப்பு செய்திகள்

Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
புதுச்சேரி காவல்துறையினர் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் - CJP செளரவ் தாஸ் குற்றச்சாட்டு
புதுச்சேரி காவல்துறையினர் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் - CJP செளரவ் தாஸ் குற்றச்சாட்டு
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget