மேலும் அறிய

777 Charlie Review: எதிர்பார்க்கப்பட்ட கன்னட படம்.. பீல் குட்டா? போரா? எப்படி இருக்கிறது 777 சார்லி..!

777 Charlie Movie Review Tamil:தமிழில் நாயை மையப்படுத்தி சில படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் நாய்கள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவும், சாகச காட்சிகளுக்காகவுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்   ‘777  சார்லி. கன்னட மொழியில் உருவாகியிருக்கும் இந்தத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப்பிற்கு பிறகு மீண்டும் கன்னட சினிமாவில் இருந்து ஒரு தரம் மிகுந்த படைப்பாக  ‘777  சார்லி’ உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி இருக்கிறார். 

 

                                 

கதையின் கரு

சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்த தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி) வாழ்கை மீது எந்த பிடிப்பும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது வாழ்வில், சார்லி என்ற பெண் நாய் நுழைகிறது.

ஆரம்பத்தில் வலுக்கட்டாயத்தின் பேரால் நாயை வளர்த்து வந்த தர்மாவிற்கு, சார்லியின் அப்பழுக்கில்லா அன்பு மாற்றத்தை கொண்டுவர, தர்மாவின் எல்லாமுமாக மாறிவிடுகிறாள் சார்லி. ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் இருப்பது தர்மாவிற்கு தெரிய வர, இந்த கேன்சரில் இருந்து சார்லியை தர்மா காப்பாற்றினாரா இல்லையா? அதன் பின்னரானா அவரது வாழ்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.  


777 Charlie Review: எதிர்பார்க்கப்பட்ட கன்னட படம்.. பீல் குட்டா? போரா? எப்படி இருக்கிறது 777 சார்லி..!

தமிழில் நாயை மையப்படுத்தி சில படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் நாய்கள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவும், சாகச காட்சிகளுக்காகவுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மீறி நாய்களுக்கான உண்மை தன்மை சார்ந்த காட்சிகள் அவற்றில் இடம் பெற்றிருந்தாலும், அவையெல்லாம் மிக சொற்ப நிமிடங்களிலேயே முடிந்துவிடும். அந்த வரிசையில் சற்று மடை மாறி கதை சொல்லியிருக்கிறது.   ‘777 சார்லி’.   

         777 Charlie Review: எதிர்பார்க்கப்பட்ட கன்னட படம்.. பீல் குட்டா? போரா? எப்படி இருக்கிறது 777 சார்லி..!

படத்தின் பாதிமுதுகெலும்பு  ரக்‌ஷித் ஷெட்டி என்றால் மீதி முதுகெலும்பு சார்லிதான். ஆரம்பத்தில் தனது சுட்டித்தனத்தாலும், சேட்டைகளாலும் நம்மை சிரிக்கவைக்கும் சார்லி, தனது நுணுக்கமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நம் கண்களை குளமாக்கிவிடுகிறாள்.


777 Charlie Review: எதிர்பார்க்கப்பட்ட கன்னட படம்.. பீல் குட்டா? போரா? எப்படி இருக்கிறது 777 சார்லி..!

 

நூல்பிடித்தாற் போல அதன் எமோஷனை எந்த பிசிறும் இல்லாமல் கடத்திய இயக்குநர் கிரண்ராஜூக்கு தனிபாராட்டுகள். அடுத்தாக ரக்‌ஷித் ஷெட்டி, முரடனாக வெறுப்பை கக்கும் காட்சிகளாட்டும், சார்லியுடனான அன்பை வெளிப்படுத்தும்  காட்சிகளாட்டும், மறைக்கப்பட்ட தன் வாழ்கையை சார்லியின் மூலமாகவும், பயணத்தின் வாயிலாகவும் உணரும் காட்சிகளாட்டும் எல்லாவற்றிலும் சதம் அடித்துவிடுகிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் அலட்டல் இல்லாத நடிப்பு ஆச்சரியப்படவைக்கிறது.

 


777 Charlie Review: எதிர்பார்க்கப்பட்ட கன்னட படம்.. பீல் குட்டா? போரா? எப்படி இருக்கிறது 777 சார்லி..!

இப்படி ஒரு கதை நல்ல கதை, இடையில் வரும் பாபி சிம்ஹா உட்பட பல கதாபாத்திரங்களுக்கு அதற்கான கனத்தை சரியாக கொடுத்திருப்பது உள்ளிட்டவற்றை நேர்த்தியாக செய்திருக்கும் இயக்குநர் படத்தின் நீளத்தில் சற்று கோட்டை விட்டுஇருக்கிறார். இதோ முதல்பாதி வந்துவிட்டது என்று நினைக்கும் அந்தத்தருணத்தில் ஒரு பாடலை போட்டு பார்வையாளர்களை சோதிக்கவைக்கிறார்.

அதே போல இராண்டாம் பாதியில் பல காட்சிகள் நம்மை எமோஷனின் உச்சத்தில் கட்டிப்போட்டாலும், அந்த காட்சிகளுக்கு இடையே நுழையும் காட்சிகள்…நம்மை நெழிய வைத்துவிடுகின்றன. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன. நீளத்தை மட்டும் கொஞ்சம் நறுக்கியிருந்தால் சார்லி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
Embed widget