மேலும் அறிய

World Stroke Day 2023: உலக பக்கவாத தினம் - பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யவேண்டிவை என்ன?

World Stroke Day 2023: பார்வை மங்குதல், திடீர் மயக்கம்,. கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், போன்றவை இதன் உடனடி அறிகுறிகள் ஆகும். 

பக்கவாதம் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என நோக்கத்தோடு ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி ‘ உலக பக்கவாத தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

பக்கவாதம் எனும் பேராபத்து

பக்கவாதம் என்றதும் பெரும்பாலானோருக்கு இதயம் சார்ந்த பிரச்னை என்ற எண்ணம் இயல்பிலேயே ஏற்படும். ஆனால், பக்கவாதம் ரத்த நாளங்களில் அடைப்பை உருவாக்கி மூளையின் பாகங்களை செயலிழக்க செய்துவிடும். மனிதனுக்கு ஏற்படும் நோய்களிலேயே இது மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், இது எந்தவித அறிகுறியும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் (Stroke). மூளைக்கு சீரான ரத்த ஓட்டம் இல்லாதது, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் உடலின் பாகங்கள் செயல்பாட்டை இழந்துவிடும். அசைவே இருக்காது. அதிக அளவு ரத்த அழுத்தம், தேவையெற்ற கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் பக்கவாதம் வர காரணங்களாக அமைந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது மரபு ரீதியாகவும் ஏற்படும் ஒன்றாகும். பக்கவாதம் வந்துவிட்டால் சரியாகாமலே போய்விடும் என்று இல்லை. சிலருக்கு தற்காலிகமாகவும், நீண்ட நாட்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பின் அளவிற்கு ஏற்ப பாதிப்பு அமையும். 

உடனடி அறிகுறிகள்

பக்கவாதம் ஆபத்தானது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் - இதற்கு இதுதான் அறிகுறி என்று குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. ஆனால், உடனடி அறிகுறிகளை கவனித்து மருத்துவரை அணுகுவது நல்லது. தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், போன்றவை இதன் உடனடி அறிகுறிகள் ஆகும். 

உலக பக்கவாதம் தினம்

வயதுவரம்பின்றி இந்த நோய்மை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடல் எடையை சீராக பராமரிப்பது, மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது, உடலையும், மனதையும் ஆரோக்கியமான வைத்து கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும், பக்கவாதம் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் -29ம் தேதி ‘உலக பக்கவாத தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

பக்கவாதம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகளை மருத்துவ உலகம் பரிந்துரைகிறது. 

  • புகை பழக்கம் இருந்தால் அதிலிருந்து விடுபடவும். மருத்துவரை அணுகி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடலாம். 
  • சீரான உடல் எடையை பராமரிக்கவும். அதிக உடல் பருமன் இருப்பின், முயற்சி செய்து எடையை கட்டுக்குள் வைக்கவும். ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யவும். 
  • சரியான உணவுப் பழக்கம் இருப்பதை உறுதி செய்யவும். அதிக கெட்ட கொழுப்புள்ள உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை அடிக்கடி உண்பதை தவிர்க்கவும். 
  • இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதையும் கவனியுங்கள். 
  • இரத்த அழுத்தத்தை சீராக வைத்தல், சந்தோஷமான சூழல், புகை, மது பழக்கம் கைவிடுதல் போன்றவை இந்த நோயை வரவிடாமல் பாதுகாக்கும்.
  • மேலும், இதய நாள நோய், சர்க்கரை குறைபாடு கொண்டவர்களைப் பக்கவாதம் தாக்கும் ஆபத்து அதிகம் என்று தெரிவிக்கின்றனர். எனவே, இவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

ஆண்டுக்கு ஆண்டு பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதற்கு மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget