மேலும் அறிய

இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்

சோர்வு காரணமாக எதிர்வினை ஆற்றும் திறன் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேரப் பயணத்தைச் பாதுகாப்பானதாக மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை காணலாம்

இரவு நேரப் பயணம் பகல் நேரத்தைப் போல எளிதானது அல்ல. குறைவான வெளிச்சம், உடல் சோர்வு மற்றும் எதிர்பாராத தடைகள் என இரவு நேரப் பயணம் சவாலானது. போதிய வெளிச்சமின்மை தூரத்தைக் கணிக்க சிரமத்தை ஏற்படுத்துகிறது. எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் (Headlights) பார்வையைப் பாதிக்கலாம். சோர்வு காரணமாக எதிர்வினை ஆற்றும் திறன் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேரப் பயணத்தைச் பாதுகாப்பானதாக மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ:

1. பார்வைத் திறன் - முகப்பு விளக்குகளின் பராமரிப்பு

இரவில் சாலை அடையாளங்கள் மற்றும் திருப்பங்களைக் கண்டறிவது கடினம். எனவே, வாகனத்தின் முகப்பு விளக்குகள் எப்போதும் சுத்தமாகவும், சரியாகப் பொருத்தப்பட்டும் இருக்க வேண்டும்.இருட்டான சாலைகளில் 'ஹை பீம்' (High beam) பயன்படுத்தலாம், ஆனால் எதிரே வாகனம் வரும்போது உடனடியாக 'லோ பீம்' (Low beam) முறைக்கு மாற வேண்டும்.முன்பக்கக் கண்ணாடி மற்றும் கண்ணாடிகளில் (Mirrors) தூசி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2. சிறிய இடைவேளைகள் கட்டாயம்

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு பயணத்தைத் தொடங்கும்போது தூக்க உணர்வு ஏற்படலாம். கொட்டாவி விடுவது மற்றும் கவனம் சிதறுவது ஆபத்தின் அறிகுறி.ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை சிறிய இடைவேளை எடுப்பது உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.காபி போன்ற பானங்கள் தற்காலிகமாக விழிப்புணர்வைத் தந்தாலும், அவை தூக்கத்திற்கு மாற்றாகாது. பயணத்திற்கு முன் நல்ல உறக்கம் அவசியம்.

3. எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்திலிருந்து பாதுகாப்பு

ஒற்றைச் சாலைகளில் வரும் வாகனங்களின் அதிகப்படியான வெளிச்சம் கண்களைப் பறிக்கலாம். அப்போது நேரடியாக அந்த விளக்குகளைப் பார்க்காமல், சாலையின் விளிம்பைப் பார்த்து வாகனத்தை ஓட்டவும். அதே போல் பின்னால் வரும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணாடியில் பட்டுத் தெரியாமல் இருக்க, உள்ளே இருக்கும் ‘ரியர் வியூ மிரரை’ (Rear View Mirror) ‘நைட் மோடில்’ (Night mode) மாற்றவும்.

4. வேகக் கட்டுப்பாடு

குறைந்த வெளிச்சத்தில், ஒரு தடையைப் பார்த்த பிறகு எதிர்வினை ஆற்ற குறைந்த நேரமே கிடைக்கும். எனவே, வேகத்தைக் குறைத்து ஓட்ட வேண்டும். மேலும் முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே போதிய இடைவெளியைப் பராமரிக்கவும். இது திடீரென பிரேக் போட வேண்டிய சூழலில் உதவும்.

5. கவனம் சிதறாமல் இருக்க..

அதே போல் காரின் டேஷ்போர்டு விளக்குகள் அதிக வெளிச்சத்துடன் இருந்தால் அது உங்கள் பார்வையைப் பாதிக்கும். எனவே, கண்களுக்கு அசௌகரியம் இல்லாதவாறு அதன் வெளிச்சத்தைச் சீரமைக்கவும். காரில் செல்லும் போது சத்தமான இசை, அலைபேசி பயன்பாடு, சக பயணிகளுடன் அதிக உரையாடல் போன்றவை கவனத்தைச் சிதறடிக்கும். மேலும் மழை மற்றும் பனி மூட்டமான காலநிலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினம். அப்போது 'ஃபாக் லேம்ப்' (Fog lamps) விளக்குகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த வேகத்தில் பயணம் செய்ய வேண்டும். 


About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !
பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !
Kitchen Tips: மழைக்காலத்தில் அரிசியில் அதிகரிக்கும் வண்டுகள்... வராமல் தடுப்பது எப்படி?
Kitchen Tips: மழைக்காலத்தில் அரிசியில் அதிகரிக்கும் வண்டுகள்... வராமல் தடுப்பது எப்படி?
முடிக்கு மருதாணி பூசுவது ஆபத்தானதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.. நோட் பண்ணுங்க!
முடிக்கு மருதாணி பூசுவது ஆபத்தானதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.. நோட் பண்ணுங்க!
மனிதர்களை நம்பி வீட்டிற்குள் வாழும் குருவி.. காரைக்குடியில் நெகிழ்ச்சியான இயற்கை உறவு!
மனிதர்களை நம்பி வீட்டிற்குள் வாழும் குருவி.. காரைக்குடியில் நெகிழ்ச்சியான இயற்கை உறவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget