மேலும் அறிய

Navratri Fasting Basics: தொடங்கியது நவராத்தி; சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் - முழு விவரம்

Navratri Fasting Basics: சபுதானா கிச்சடி என்றழைக்கப்படும் ஜவ்வரிசி உப்புமா எப்படி செய்வதற்கான ரெசிபி இதோ உங்களுக்காக

இன்று முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் என அடுத்த ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 

நவராத்திரி:

அம்மன் இவ்வுலகில் எல்லாமுமாக விளங்குவதாக நம்பபடுவதால் அதை உணர்த்தும்விதமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கு ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படும். 

நவராத்திரி விழா நாள்களில் ஒவ்வொரு நாள்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக சிறப்பு பூஜைகள் எல்லாம் நடத்தப்படும். வீடுகளில் கொலு வைத்து விதவிதமான பொம்மைகளால் அலங்கரித்து, வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவர்.

கொலு வழிபாடு:

நவராத்திரி முதல் மூன்று நாள்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாள்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா காலத்தில் கோயில்களில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு இருக்கும். ஒன்பது மலர்கள், பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள் என ஒன்பது விதமான அலங்காரங்கள் என அம்மனை வழிபடுவர். நவராத்திரி விழாவின்போது விரத நாட்களில் வீட்டில் செய்ய இனிப்பு வகைகள் சிலவற்றை காணலாம். 

நவராத்திரி விரதம் 

நவரத்திரி நாட்களில் விரதம் இருப்பது அம்மனை வழிப்பட்டால் வளமான வாழ்க்கை கிடைக்கும் என நம்பப்படுகிறது. நினைத்த காரியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.  ஒரு வேளை மட்டும் சாப்பிடும் விரத முறையும் உண்டு.  வீட்டில் கொலு வைத்திருப்பதால் மூன்று வேளை சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு பூஜை செய்ததும் பழங்கள் போன்ற உணவுகளை சாப்பிடலாம். மாலையில் அம்மனுக்கு படைக்க செய்யப்படும் உணவையே இரவு சாப்பிட்டுவிட்டு விரதத்தை முடிக்கலாம். விரதம் இருப்பவர்கள் பால், மோர், பழங்கள் போன்றவற்றை உணவாக சாப்பிடலாம். திட உணவு வேண்டுமென்றால் சத்துமாவு கஞ்சி சாப்பிடலாம்.

பாசிப்பயறு சுண்டல், இனிப்பு போலி, கொண்டக்கடலை சுண்டல் மற்றும் இனிப்பு வகைகள் என்று தினம் செய்வது வழக்கம். பண்டிகை என்றாலே உணவும் அதை பகிர்ந்து உண்ணுவதுதானே. அப்படி, நவராத்தி விழா நாட்களில் செய்ய சபுதானா கிச்சடி என்றழைக்கப்படும் ஜவ்வரிசி உப்புமா எப்படி செய்வதற்கான ரெசிபி இதோ உங்களுக்காக..இதை விரத நாள்களும் சாப்பிடலாம்.

ஜவ்வரிசி உப்புமா
 
தேவையான பொருட்கள்:

ஊறவைக்க:

ஜவ்வரிசி - ஒரு கப்

தண்ணீர் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

கிச்சடி செய்ய:

வறுத்த நிலக்கடலை - 1/2 கப்

நெய்- 2 டேபிள் ஸ்பூம்

சீரகம்- ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய்- 3 அல்லது 4 (காரத்திற்கேற்ப பயன்படுத்தவும்)

இஞ்சி- ஒரு சிறிய துண்டு

தக்காளி- 1/2 கப்

வேகவைத்த உருளைக்கிழங்கு- ஒரு கப்

கருவேப்பிலை- சிறிதளவு

உப்பு- தேவையா அளவு

மிளகுதூள்- தேவையான அளவு

எலுமிச்சை பழச் சாறு- சிறதளவு

கொத்தமல்லி- ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

பாத்திரத்தில் உப்பு சேர்த்து தண்ணீரில் ஜவ்வரிசியை 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கிவும். உருளைக் கிழங்கை நன்கு வேக வைத்து சிறதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் மிதமான தீயில் வானலி நன்கு சூடானதும், இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து இளஞ்சூட்டில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு கருவேப்பிலை, உருளைக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்.  அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து வானலியை மூடி வைக்கவும்.

சிறது நேரத்தில் ஜவ்வரிசியின் நிறம் மாறும். ஜவ்வரிசி வெந்துவிட்டது. வெளிர் வெள்ளை நிறமாக மாறிய ஜவ்வரிசியுடன், வறுத்த நிலக்கடலையை சேர்த்து கிளறவும். இதோடு கைப்பிடியளவு கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். இதோடு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி!

இதோடு பழங்களை கொண்டு தயாரிக்கும் சாலட், காய்கறி சாலட், ஜூஸ் போன்றவற்றையும் அருந்தலாம். ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், கொய்யா, இதோடு பேரிட்ச்சையும் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். ஓட்ஸ், கம்பு களி, பயிறு வகைகள் உள்ளிட்டவையும் விரத நாள்களில் ஏற்றது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொதுவாக விரதம் நாட்களில் அதிக மசாலா, பூண்டு, வெங்காயம், சேர்த்த உணவுகளை தவிர்க்கலாம். நவராத்திரி பூஜை செய்பவர்கள்  அரிசி, கோதுமை, ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.  வீட்டில் சமைத்த உணவுகள், பழங்கள் தவிர்த்து, ரெடிமேடாக பாக்கெட்டில் கிடைக்கும் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டும். எண்ணையில் பொறித்த உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, பொரித்த உணவுகள், துரித உணவுகளை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Embed widget