12-வது வகுப்பு தேர்ச்சி, ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் வேலை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 13 வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 13 வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள 'சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்' (CBC) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 13 வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர் - சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (CBC) தகுதிகள்:
குழு சார்ந்த தகுதிகள்:
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும், சுய உதவிக் குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவே அல்லது தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராக பணி இருத்தல் வேண்டும், தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சார்ந்தவராக இருத்தல் அவசியம், மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும்.
அடிப்படைத் தகுதிகள்:
(உரிய தகுதிகளுடன் இலக்கு மக்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற விண்ணப்பதாரர்களை கருத்தில் கொள்ளலாம்), மலைப் பகுதியிலுள்ள ஆதி வாசிகள் குடியிருப்புகளில் மேற்கூறிய உறுப்பினர் இல்லாத நிலையில் ஆண் உறுப்பினரை மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு ஒப்புதலுடன் தேர்வு செய்யலாம்.
விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும், 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாராக்கடன் உள்ள குழுவின் உறுப்பினராக இருக்க கூடாது.
மலைப் பகுதிகளில் 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதர தகுதிகளுடன் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவாடகளாக கருதப்படலாம். துகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம், கணினி திறன் மற்றும் இரு சக்கர வாகனம் ஒட்டுநர் உரிமம் உள்ள இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் காலை 10.00 மணி முதல் 5.00 வரை அனுப்பலாம். விண்ணப்பங்கள் அளித்திட கடைசி தேதி 05.06.2026 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















