மேலும் அறிய

தெற்கு ரயில்வேயில் 81 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க... முழு விவரம் உள்ளே!!!

விளையாட்டு கோட்டா மற்றும் சாரண, சாரணியர் ஒதுக்கீட்டில் உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் 81 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி என்ன என்பது போன்ற விபரங்கள் உங்களுக்காக முழுமையாக தரப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு செல் வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு கோட்டா மற்றும் சாரண, சாரணியர் ஒதுக்கீட்டில் உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ரயில்வேயில் பணி வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? அதுவும் தெற்கு ரயில்வேயில் வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இது அதற்கு சரியான தருணம் ஆகும். விளையாட்டு கோட்டா மற்றும் சாரண, சாரணியர் ஒதுக்கீடு கீழ் உள்ள 81 காலிப்பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் சாரண, சாரணியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். 

2025-26 ஆண்டில் தெற்கு ரயில்வேயில் விளையாட்டு கோட்டாவில் நிலை 1, 2, 3, 4 மற்றும் 5 கீழ் உள்ள பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தடகளம், குத்துச்சண்டை, கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, கோல்ஃப், நீச்சல், கால்பந்து, ஹாக்கி, பளுத்தூக்குதல் ஆகிய விளையாட்டு பிரிவுகளில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நிலை 4/5 5
நிலை 2/3 16
நிலை 1 46
மொத்தம் 67

நிலை 1இல் உள்ள பணியிடங்களுக்கு தொடக்க சம்பளம் ரூ.18,000 ஆகும். நிலை 2இல் உள்ள இடங்களுக்கு தொடக்க சம்பளம் ரூ.19,900 ஆகும். நிலை 3 கீழ் ரூ.21,700 வழங்கப்படும். நிலை 4 கீழ் ரூ.25,500 மற்றும் நிலை 5 கீழ் ரூ.29,200 தொடக்க சம்பளம் ஆகும்.

இப்பணியிடங்களுக்கு 01.01.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் 25 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.2001 மற்றும் 01.01.2008 தேதியின் இடையில் பிறந்திருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு கிடையாது.

நிலை 1 கீழ் உள்ள பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்தவர்கள் தகுதி பெற்றவர்கள். நிலை 2 மற்றும் 3 கீழ் உள்ள இடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பிற்கு பின்னர் தொழிற்பயிற்சி அல்லது ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிலை 4 மற்றும் 5 கீழ் உள்ள இடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் கிளார்க் உடன் வரும் தட்டச்சர் இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதற்கான தட்டச்சு திறனை பணி நியமனத்திற்கு பின்னர் பெற வேண்டும்.

விளையாட்டு கோட்டா தகுதிகள்

சர்வதேச அளவிலான போட்டி, சாம்பியன்ஷிப், ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் போட்டிகள், யூத் ஒலிம்பிக்ஸ், சாம்பியன்ஷிப் டிராஃபி, டாவிஸ் கப், ஏசியன் சாம்பியன்ஷிப், தெற்கு ஆசியா கூட்டமைப்பு போட்டிகள், USIC மற்றும் சர்வதேச பல்கலைக்கழக போட்டிகள் ஆகியவற்றில் பதக்கம் வெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு கோட்டாவின் கீழ் விண்ணப்பிக்கும் வீரர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்படும். விளையாட்டு சாதனைகள், கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். டிரையல் அழைப்பு விடுக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் https://rrcmas.in/open-market-recruitment.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 13 முதல் தொடங்கிய உள்ளது. வரும் அக்டோபர் 12.10.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சாரண, சாரணியர் கோட்டா இடங்கள்

தெற்கு ரயில்வே மற்றும் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை (ICF) கீழ் நிலை 1 அடிப்படையிலான பணியிடங்கள் சாரண, சாரணியர் கோட்டாவின் நிரப்பப்படுகிறது.

மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதில் வகுப்பு வாரிய ஒதுக்கீடு கிடையாது. 5 வருடங்கள் உறுப்பினராக இருந்தவர்கள், தலைவர் பதவி வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இக்கோட்டாவில் 01.01.20226 தேதியின்படி, 18 முதல் 33 வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினர் 36 வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 38 வயது வரையும் இருக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ படித்தவர்கள், தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் ஆகியவை கல்வித்தகுதி ஆகும்.

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.250 செலுத்த வேண்டும். https://rrcmas.in/open-market-recruitment.htmlஎன்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 30-ம் தேதியே தொடங்கியது. வரும் செப்டம்பர் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Embed widget