மேலும் அறிய

தெற்கு ரயில்வேயில் 81 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க... முழு விவரம் உள்ளே!!!

விளையாட்டு கோட்டா மற்றும் சாரண, சாரணியர் ஒதுக்கீட்டில் உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் 81 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி என்ன என்பது போன்ற விபரங்கள் உங்களுக்காக முழுமையாக தரப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு செல் வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு கோட்டா மற்றும் சாரண, சாரணியர் ஒதுக்கீட்டில் உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ரயில்வேயில் பணி வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? அதுவும் தெற்கு ரயில்வேயில் வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இது அதற்கு சரியான தருணம் ஆகும். விளையாட்டு கோட்டா மற்றும் சாரண, சாரணியர் ஒதுக்கீடு கீழ் உள்ள 81 காலிப்பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் சாரண, சாரணியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். 

2025-26 ஆண்டில் தெற்கு ரயில்வேயில் விளையாட்டு கோட்டாவில் நிலை 1, 2, 3, 4 மற்றும் 5 கீழ் உள்ள பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தடகளம், குத்துச்சண்டை, கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, கோல்ஃப், நீச்சல், கால்பந்து, ஹாக்கி, பளுத்தூக்குதல் ஆகிய விளையாட்டு பிரிவுகளில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நிலை 4/5 5
நிலை 2/3 16
நிலை 1 46
மொத்தம் 67

நிலை 1இல் உள்ள பணியிடங்களுக்கு தொடக்க சம்பளம் ரூ.18,000 ஆகும். நிலை 2இல் உள்ள இடங்களுக்கு தொடக்க சம்பளம் ரூ.19,900 ஆகும். நிலை 3 கீழ் ரூ.21,700 வழங்கப்படும். நிலை 4 கீழ் ரூ.25,500 மற்றும் நிலை 5 கீழ் ரூ.29,200 தொடக்க சம்பளம் ஆகும்.

இப்பணியிடங்களுக்கு 01.01.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் 25 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.2001 மற்றும் 01.01.2008 தேதியின் இடையில் பிறந்திருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு கிடையாது.

நிலை 1 கீழ் உள்ள பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்தவர்கள் தகுதி பெற்றவர்கள். நிலை 2 மற்றும் 3 கீழ் உள்ள இடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பிற்கு பின்னர் தொழிற்பயிற்சி அல்லது ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிலை 4 மற்றும் 5 கீழ் உள்ள இடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் கிளார்க் உடன் வரும் தட்டச்சர் இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதற்கான தட்டச்சு திறனை பணி நியமனத்திற்கு பின்னர் பெற வேண்டும்.

விளையாட்டு கோட்டா தகுதிகள்

சர்வதேச அளவிலான போட்டி, சாம்பியன்ஷிப், ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் போட்டிகள், யூத் ஒலிம்பிக்ஸ், சாம்பியன்ஷிப் டிராஃபி, டாவிஸ் கப், ஏசியன் சாம்பியன்ஷிப், தெற்கு ஆசியா கூட்டமைப்பு போட்டிகள், USIC மற்றும் சர்வதேச பல்கலைக்கழக போட்டிகள் ஆகியவற்றில் பதக்கம் வெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு கோட்டாவின் கீழ் விண்ணப்பிக்கும் வீரர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்படும். விளையாட்டு சாதனைகள், கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். டிரையல் அழைப்பு விடுக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் https://rrcmas.in/open-market-recruitment.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 13 முதல் தொடங்கிய உள்ளது. வரும் அக்டோபர் 12.10.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சாரண, சாரணியர் கோட்டா இடங்கள்

தெற்கு ரயில்வே மற்றும் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை (ICF) கீழ் நிலை 1 அடிப்படையிலான பணியிடங்கள் சாரண, சாரணியர் கோட்டாவின் நிரப்பப்படுகிறது.

மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதில் வகுப்பு வாரிய ஒதுக்கீடு கிடையாது. 5 வருடங்கள் உறுப்பினராக இருந்தவர்கள், தலைவர் பதவி வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இக்கோட்டாவில் 01.01.20226 தேதியின்படி, 18 முதல் 33 வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினர் 36 வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 38 வயது வரையும் இருக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ படித்தவர்கள், தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் ஆகியவை கல்வித்தகுதி ஆகும்.

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.250 செலுத்த வேண்டும். https://rrcmas.in/open-market-recruitment.htmlஎன்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 30-ம் தேதியே தொடங்கியது. வரும் செப்டம்பர் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget