இளங்கலை பட்டதாரிகளே... இது உங்களுக்காகதான்!!!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாலுகா மற்றும் ஆயுதப்படையில், காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: இளங்கலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்... அப்போ இது உங்களுக்காகதான். தமிழ்நாட்டில் 1299 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. என்ன விஷயம் தெரியுங்களா?
தமிழ்நாட்டில் 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்குகான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாலுகா மற்றும் ஆயுதப்படையில், காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், தாலுகாவில் காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கு 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு வரும் 7ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் மே 3ம் தேதிக்குள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை குறிப்பிட்டுள்ள தேர்வாணையம், எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
காலிப்பணியிடங்களில், தாலுகா மற்றும் ஆயுதப்படையில் தலா 20 விழுக்காடு துறை ரீதியான ஒதுக்கீடாகவும், வாரிசுதாரர்களுக்கு 10 சதவிகிதமும், விளையாட்டு வீரர்களுக்கு 10 விழுக்காடும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் மறக்காம 7ம் தேதி விண்ணப்பித்து பலன் பெறுங்கள். மறந்திடாதீங்க!!!


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

