தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: 5 நாள் பயிற்சி, அரசு சான்றிதழ்! வேலை, தொழில் வாய்ப்புகள்!
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஆகஸ்ட் 15 முதல் அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

தொழில்முனைவோர் ஐந்து நாட்கள் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" பெறலாம் என்று தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நாளுக்கு நாள் தங்க நகையின் விலை சரசரவென ஏறி வரும் நிலையில், தங்க நகை மதிப்பீடு சார் பணிகள் முக்கியம் வாய்ந்தவையாக மாறி உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.
பயிற்சியின் உள்ளடக்கம்
* தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல்.
* கேரட் மதிப்பீடுகள்.
* ஆசிட் சோதனை.
* எடை அளவு இணைப்பான்.
* விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate).
* ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள்
போன்றவை கற்றுத் தரப்படும்.
* மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள்.
* தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பு வழிகாட்டல்
* பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள்,
* அவற்றை பெறும் நடைமுறைகள்.
* அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.
என்ன தகுதி?
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்.
பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்
விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு https://www.editn.in/ அல்லது 9543773337 / 9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தொடர்புகொள்ளலாம்.
முகவரி:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
முன்பதிவு அவசியம்
பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.editn.in/






















