ரயில்வேயில் வேலை வேண்டுமா? செக்ஷன் கண்ட்ரோலர் பணிக்கு செப்டம்பர் 15-ல் விண்ணப்பிக்கலாம்! டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
டிகிரி முடித்து இருக்கீங்களா? ரயில்வேயில் 368 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க. முழுமையான விபரங்கள் உள்ளே.

ரயில்வேயில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு செம இனிப்பு சாப்பிட்ட மாதிரி குட் நியூஸ் வந்து இருக்கு. செப்டம்பர் மாதம் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. தேசிய அளவில் செக்ஷன் கண்ட்ரோலர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பதவிக்கு செப்டம்பர் 15-ம் தேதி விண்ணப்பம் தொடங்கப்பட உள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ரயில்வேயில் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்புகள் ஒவ்வொரு வருடமும் வெளியாகி, காலிப்பணியிடங்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதம் தேசிய அளவில் ரயில்வேயில் காலியாக உள்ள செக்ஷன் கண்ட்ரோலர் பதவிக்கான வேலைவாய்ப்பு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கு.
அதன்படி, தேசிய அளவில் 368 காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்று பார்ப்போம் வாங்க.
ரயில்வேயில் செக்ஷன் கண்ட்ரோலர் (RRB Section Controller) பதவிக்கு உத்தேசமாக 368 காலிப்பணியிடங்கலுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் மாநிலங்களின் வாரியாக இந்த பணியிடங்கள் நிரப்பப்ப்பட உள்ளது.
செக்ஷன் கண்ட்ரோலர் என்பது ரயில்வேயில் முக்கிய பதவி ஆகும். ரயில்வே நேரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முதன்மையான கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்.
இப்பதவிக்கு 7வது ஊதிய குழுவின்படி, நிலை 6 கீழ் அடிப்படை சம்பளம் ரூ.35,400 ஆகும். மேலும், கொடுப்பனை மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் இணைந்து மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடத்திற்கு 01.01.2026 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகப்படியாக 33 வயது வரை இருக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்ரின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 14-ம் தேதி வரை பெறப்பட உள்ளது.
ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். முழுமையான அறிவிப்பு வெளியான பின்னர், தேர்விற்கான பாடத்திட்டம், காலிப்பணியிடங்களின் முழுமையான விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணீடாதீங்க. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய உடனேயே விண்ணப்பித்து விடுங்கள். ரயில்வே பணி என்பதால் ஏராளமானோர் விண்ணப்பம் செய்வார்கள்.





















