திருவண்ணாமலை: 194 பேருக்கு கொரோனா தொற்று; 5 பேர் உயிரிழப்பு!
திருவண்ணாமலையில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜுன் 14 தேதிக்கு பின் மேலும் தளர்வுகளை அதிகப்படுத்தியும், அதிகமான மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழ்நாடு அரசு நீட்டிப்பு செய்துள்ளது. தொற்று அதிகரித்து காணப்படும் மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று.
குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 300-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வந்தது. அது சற்று குறையத் தொடங்கி . இது மாவட்ட மக்களிடையை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 47ஆயிரத்து 894 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 45 ஆயிரத்து 791 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 194 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 565 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 5 பேர் இறந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 565 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டரம்பட்டு, ஆரணி, செய்யார், வந்தவாசி, போளுர், உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது . இந்நிலையில் நகர் பகுதியில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகின்றனர். கிராமப்புறங்களில் சரியான முறையில் விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரும் வராமல் வெறிச்சோடி காணப்படுகிறது தடுப்பூசி சிறப்பு முகாம்கள். தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 10805 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்று முகாமில் கோவேக்சன் முதல் தடுப்பூசி 571 பேரும் இரண்டாவது தடுப்பூசி 84 பேரும் செலுத்தியுள்ளனர். கோவிஷீல்டு முதல் தடுப்பூசி 9842 நபர்களும் இரண்டாவது தடுப்பூசி 84 நபர்களும் செலுத்தியுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Before You Go
Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















