கரூர் : குறைந்துவரும் கொரோனா பரவல் : இரண்டு இலக்கத்துக்கு குறைந்தது தொற்று பாதிப்பு எண்ணிக்கை..!
கரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5000 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு சென்ற இடம் வகையில் சிறப்பு முகாம் மூலம் போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டத்திற்கு பல்வேறு தளர்வுகளுடன் ஊடரங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுடன் தளர்வுகள் அறிவித்து அதன் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் அறிவிக்கப்பட்டிருந்த 46 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 75 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 03 ஆக உள்ளது என சுகாதாரத்துறைதகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மொத்த விவரம் தற்போது காணலாம்: -
தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21920 ஆகவும், அதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவள் எண்ணிக்கை 20842 ஆகவும், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 739 ஆகவும், கரூர் மாவட்டத்தில் 339 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும், தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5000 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையில் சிறப்பு முகாம் மூலம் போடப்பட்டு வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் காத்துக் கொண்டு இருக்கும் நிலையும் வந்துள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி முகாம் இன்னும் கூடுதலான சிறப்பு மையங்களை ஏற்படுத்தி அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி சென்றடையும், வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





















