Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் புதிதாக 5415 பேருக்கு கொரோனா
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் துணிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் புதிதாக 5415 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 415 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,70,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,415 ஆக உள்ளது. அதிகபட்சமாக வேலூரில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் இந்தாண்டின் மிகக் குறைந்த கொரோனா எண்ணிக்கை இதுவாகும்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தாண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கை இது எனக் கூறப்படுகிறது. டெல்லியில் மேலும் 158 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.






















