Tamil Nadu Coronavirus LIVE : தஞ்சாவூரில் இன்று அதிகபட்சமாக கொரோனாவுக்கு 26 பேர் பலி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 013 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,194 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,013 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 224 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 227 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 227 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 115 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 93 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 20 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 26, சென்னை 20, திண்டுக்கல், ஈரோடு, மதுரையில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழ்நாட்டில் இன்று 4,013 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 013 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,194 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,013 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 224 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 227 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 227 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 115 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 93 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 20 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 26, சென்னை 20, திண்டுக்கல், ஈரோடு, மதுரையில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா மரணத்திற்கு தனி இறப்பு சான்றிதழ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியா முழுவதுமே இறப்பு சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடுவதில்லை. தேவைப்பட்டால் கொரோனா மரணம் என தனியாக இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம் - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்





















