மேலும் அறிய

மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி தேவையா? ஆய்வுகள் கூறுவது என்ன!

நாம் எடுத்துக்கொள்ளும் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்துகொண்டே வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் தேவை உயர்ந்து வருகிறது.

ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் எஸ்இ ஆகியவற்றிலிருந்து கோவிட் -19 தடுப்பூசியால் உடலுக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சில மாதங்களில் கணிசமாக பலவீனமடைகிறது, ஆண்களுக்கு பெண்களை விட குறைவான பாதுகாப்பே உள்ளது, பூஸ்டர் டோஸ் பயன்பாட்டை ஆதரிக்கும் ஆராய்ச்சியின் முடிவு நமக்கு இத்தகைய அதிர்ச்சியான தகவல்களை கூறுகின்றன. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் புதன்கிழமை வெளியிடப்பட்ட சுமார் 5,000 இஸ்ரேலிய சுகாதாரப் பணியாளர்களின் ஆய்வின்படி, தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கிய ஆறு மாதங்களில் எதிர்ப்புசக்தி தொடர்ந்து குறைந்து வருகின்றன. முதலில் சிறு சிறு அளவாகவும், பின்னர் வெகுவாகவும் குறைகிறதென்று அந்த ஆய்வு கூறுகிறது. கொரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியைப் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு முயற்சியாக 2 டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுவதால், 3-வது தவணையாக, பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும் என்று டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடையே ஒரு கருத்து எழுந்துள்ளது. அமெரிக்காவில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட இரு வாரம் முன்பு அனுமதி அளிக்கப்பட்டது.

மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி தேவையா? ஆய்வுகள் கூறுவது என்ன!

அதிபர் ஜோ பைடனும்  பூஸ்டர் டோஸை கடந்த வாரம் எடுத்துக்கொண்டிருந்தார். இதனால் இந்தியாவில் இந்த பேச்சு எழுந்தது. அமெரிக்க நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோசெல்லா வெலன்ஸ்கி கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எம்மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ அதே மாதிரியான மிதமான பக்கவிளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 71% பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி உள்ளது. 56% பேருக்குச் சோர்வும், 43% பேருக்குத் தலைவலியும் ஏற்படுகின்றன. 28% பேருக்குத் தங்களது அன்றாடச் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.1% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி தேவையா? ஆய்வுகள் கூறுவது என்ன!

நாட்டின் மிகப் பெரிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பான கிளாலிட் ஹெல்த் சர்வீசஸின் மற்றொரு ஆய்வில், 100,000 நபர்களுக்கு 2.13 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 16 முதல் 29 வயதிற்குட்பட்ட ஆண் நோயாளிகளிடையே அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான வழக்குகள் லேசான பாதிப்புகளையே கொண்டுள்ளது. ராமத் கானில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தின் ஆய்வின் படி, இளைஞர்களை விட வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆண்களுக்கு பெண்களை விட எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றே தெரிகிறது. இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே முழுமையாக சென்று சேராத நிலையில் அதற்குத்தான் முன்னுரிமை என்றும் பேச்சுவார்த்தையின் மூலம் அறிய முடிகிறது. எப்படியாகினும் அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் இருந்து வந்த கருத்துகள் பூஸ்டர் தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்துவதால் இந்தியாவிலும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget