சேலத்தில் 251 பேருக்கு கொரோனா தொற்று; 3 பேர் பலி..!
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சேலத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1480 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 412 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 85913 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பை எண்ணிக்கை 88883 ஆக உயர்வு. மூன்றாம் நாட்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 138 மையங்களில் 55380 தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,05,845 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 138 மையங்களிலும் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதிலும் மிகக் குறைந்த அளவில் தடுப்பூசி வருவதால் தினமும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொல்ல வரும் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் மாவட்டத்திலுள்ள 85 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது , தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மூன்று மையங்கள் தொங்கும் பூங்கா, மெய்யனுர் சட்டக்கல்லூரி மற்றும் காந்தி ஸ்டேடியம் உள்ள 420 படுக்கைகள் நோயாளிகள் வரத்து இல்லாததால் இன்று முதல் மூடப்படுவதாகவும் மேலும் தொற்று குறையும் பட்சத்தில் அனைத்து தற்காலிக சிகிச்சை மையங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 92 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 82 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 89 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 158 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 923 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















