மயிலாடுதுறையில் 64 பேருக்கு கொரோனா; 2 பேர் உயிரிழப்பு!
ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. அது சற்று குறையத் தொடங்கி இன்றுடன் ஒரு வார காலமாக படிப்படியாக குறைந்து இன்று 64 ஆக பதிவாகியுள்ளது. இது மாவட்ட மக்களிடையை நம்பிக்கையை ஏற்படுத்தி தளர்வுகளை எதிர்பார்த்த நிலையில் அரசு தொடர்ந்து தொற்று பரவும் மாவட்டங்களில் மயிலாடுதுறையும் வைத்துள்ளது .

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. அது சற்று குறையத் தொடங்கி இன்றுடன் ஒரு வார காலமாக படிப்படியாக குறைந்து இன்று 64 ஆக பதிவாகியுள்ளது. இது மாவட்ட மக்களிடையை நம்பிக்கையை ஏற்படுத்தி தளர்வுகளை எதிர்பார்த்த நிலையில் அரசு தொடர்ந்து தொற்று பரவும் மாவட்டங்களில் மயிலாடுதுறையும் வைத்துள்ளது . இதுவரை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 866 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 36 ஆயிரத்து 753 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 64 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 94 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 513 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 42 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும். நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது என மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Before You Go
Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















