மேலும் அறிய

Covid Vaccine | 88 லட்சத்திலிருந்து 53 லட்சம் :  தடுப்பூசி எண்ணிக்கை சரிவு எழுப்பும் கேள்விகள் என்ன?

மத்திய அரசு இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசிப் போடத் தகுதியானவர்கள் அனைவருக்கும் ஊசி போடப்படும் எனக் கூறியிருக்கிறது. இதற்கு அன்றாடம் 97 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நேற்றுமுன் தினம் திங்கள்கிழமையன்று, ஒரே நாளில் 88 லட்சம் பேருக்குக் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவின் படி 53.86 லட்சம் பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த சரிவு, தடுப்பூசி திட்டத்தின் நீடித்த நிலைப்புத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாகவே நேற்று எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தடுப்பூசியைப் பதுக்குவதாலேயே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. திங்கள்கிழமையன்று தடுப்பூசிப் பட்டியலில் இருந்த டாப் 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்றாடத் தேவை 97 லட்சம்:

மத்திய அரசு இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசிப் போடத் தகுதியானவர்கள் அனைவருக்கும் ஊசி போடப்படும் எனக் கூறியிருக்கிறது. இதற்கு அன்றாடம் 97 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் வேகத்தைப் பார்க்கும்போது இந்த இலக்கை எட்டமுடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஆனால், தேசிய தொற்றுநோய் தடுப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறும்போது, அரசாங்கம் அன்றாடம் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடத் திட்டமிடிருக்கிறது. தினமும் 1.25 கோடி தடுப்பூசி ஸ்டாக் வைத்துக்கொள்ளும் திறன் அரசிடம் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், மத்திய அரசு முழுமையாக மாநில அரசுகளுடன் ஒத்துழைத்து வருகிறது. மாநில அரசுகளுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு தடுப்பூசி கொடுக்கப்படும் என்பதுவரை வெளிப்படையாகத் தெரியப்படுத்துகிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால், சில மாநிலங்களில் இரண்டு நாட்களில் தடுப்பூசி வழங்கப்பட்ட எண்ணிக்கை பெருமளவில் வித்தியாசமாக இருக்கின்றது.

திங்களன்று மத்தியப்பிரதேசத்தில் 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே வேளையில், நேற்று வெறும் 5000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஜூன் 15ம் தேதி 37,904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூன் 20-ஆம் தேதி வெறும் 4098 பேருக்கு செலுத்தப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதியில் 16,95,592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று, 5000 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறும்போது,  டேட்டா எண்ட்ரியில் ஏதாவது தவறு நடந்திருக்குமே தவிர தடுப்பூசித் திட்டத்தில் தொய்வில்லை. மத்தியப் பிரதேசம் தடுப்பூசிகளைப் பதுக்கவும் இல்லை எனக் கூறியிருக்கிறார். நேற்றைய தினம் உத்தரப் பிரதேசம் மட்டும்தான் அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்கியிருக்கிறது. ஜூன் 21ல் 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 22ல் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Embed widget