மேலும் அறிய

ரத்த தானம் பற்றி மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும், அவற்றின் உண்மைத்தன்மையும்!

மக்களுள் பலரும் பல்வேறு வதந்திகள் காரணமாக ரத்த தானம் மேற்கொள்ள மறுக்கும் சூழலும் உருவாகிறது. ரத்த தானம் குறித்த வதந்திகளையும், அவற்றின் உண்மைத்தன்மைகளை இங்கே கொடுத்துள்ளோம்... 

மக்களை ரத்த தானம் செலுத்துவதற்காக ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் தினமும் சுமார் 12 ஆயிரம் பேர் போதிய ரத்தம் பெற முடியாததால் உயிரிழப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ரத்த தானம் என்பது சமூகத்தில் மிக முக்கியமானது, ஒரு யூனிட் ரத்தம் கொடை தருவதன் மூலமாக சுமார் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும், ரத்தத்தை ப்ளேட்லெட், ப்ளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவற்றைப் பிரித்தும் கொடை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்தத் தரவுகள் இவ்வாறு இருக்க, மக்களுள் பலரும் பல்வேறு வதந்திகள் காரணமாக ரத்த தானம் மேற்கொள்ள மறுக்கும் சூழலும் உருவாகிறது. ரத்த தானம் குறித்த வதந்திகளையும், அவற்றின் உண்மைத்தன்மைகளை இங்கே கொடுத்துள்ளோம்... 

1. உடலைப் பலவீனமாக்குகிறது

ரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமாகிறது என்பதைப் பலரும் நம்புகின்றனர். 

உண்மைத்தன்மை: ரத்த தானம் மேற்கொண்ட பிறகு உடல் பலவீனமடைவதில்லை. மேலும், ஒரு பிண்ட் ரத்தம் மட்டுமே கொடையாக எடுக்கப்படுகிறது. சராசரியாக மனித உடலில் சுமார் 10 முதல் 12 பிண்ட் வரையிலான ரத்தம் இருக்கும். மேலும், கொடை மேற்கொண்ட பிறகு, ரத்தம் மீண்டும் உற்பத்தியாகும். ரத்த தானம் மேற்கொள்வதற்கு முன்பும், பின்பும் போதிய ஆரோக்கியமான உணவு, நீர்ச்சத்து முதலானவற்றை உட்கொள்வது சிறந்தது. 

ரத்த தானம் பற்றி மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும், அவற்றின் உண்மைத்தன்மையும்!

2. ரத்த தானம் வலிமிக்கது

ரத்த தானம் செய்யும் போது வலி ஏற்பட்டு, நீண்ட நாள்கள் நீடிக்கும் என்று மூடநம்பிக்கை ஒன்றுண்டு. 

உண்மைத்தன்மை: ரத்த நாளங்களில் ஊசியை ஏற்றும்போது தவிர வேறு எந்த வலியும் ரத்த தானத்தால் ஏற்படுவதில்லை. ஊசியால் ஏற்படும் வலியும் இரண்டு நாள்களுக்குள் ஆறிவிடும். 

3. புகைப்பிடிப்பவர்களால் ரத்தம் கொடை அளிக்க முடியாது

புகைப்பிடிப்பதைப் பழக்கமாகக் கொண்டவர்கள் ரத்த தானம் அளிக்க முடியாது என நம்பப்படுகிறது. 

உண்மைத்தன்மை: ஒருவர் 18 வயதைக் கடந்தவராக இருந்து, புகைபிடிப்பவராக இருந்தாலும் அவரால் ரத்த தானம் வழங்க முடியும். ரத்த தானம் கொடுப்பதற்கும் கொடுத்த பிறகும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை புகைப்பிடிப்பதையும், 24 மணி நேரங்களை வரை மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். கொடையாக அளிக்கும் ரத்தம் சிகிச்சையில் இருக்கும் நபரின் உடலுக்குச் செல்வதால், ரத்த தானம் மேற்கொள்ள விரும்புபவர்கள் புகைப்பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. 

4. மெலிந்த தேகம் கொண்டவர்களால் ரத்த தானம் அளிக்க முடியாது

மெலிந்த தேகம் கொண்டவர்கள் ரத்த தானம் அளிக்க முடியாது என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. 

ரத்த தானம் பற்றி மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும், அவற்றின் உண்மைத்தன்மையும்!

உண்மைத்தன்மை: ரத்தக் கொடையாளரின் தகுதியை அவரது உடல்வாகு தீர்மானிப்பதில்லை. குறைந்தபட்சம் 45 கிலோ எடை கொண்டவராக ரத்தக் கொடையாளர் இருக்க வேண்டும். எனவே ஒல்லியாக இருப்பவர்கள் ரத்த தானம் அளிக்க கூடாது என்பதில் உண்மை இல்லை. மேலும், உடல் எடைக்கும் மனித உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தின் அளவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. 

5. ரத்த தானம் நோய்த் தொற்றை உருவாக்குகிறது

ரத்த தானம் காரணமாக ஹெச்.ஐ.வி முதலான நோய்த் தொற்று ஏற்படுவதாகப் பலரும் நம்புகின்றனர். 

உண்மைத்தன்மை: ரத்த தானம் அளிக்கும் போது, புதிய ஊசி பயன்படுத்தபடுகிறதா என்பதை சோதிக்க வேண்டும். புதிய ஊசி பயன்படுத்தப்பட்டால், நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
Rasipalan: சனிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அமோகம் - 12 ராசிக்கும் பலன் இங்கே!
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
HBD Harish Kalyan: பிக் பாஸ் கொடுத்த பப்ளிசிட்டி! விடாமுயற்சியுடன் போராடும் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் இன்று!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Embed widget