மேலும் அறிய

ரத்த தானம் பற்றி மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும், அவற்றின் உண்மைத்தன்மையும்!

மக்களுள் பலரும் பல்வேறு வதந்திகள் காரணமாக ரத்த தானம் மேற்கொள்ள மறுக்கும் சூழலும் உருவாகிறது. ரத்த தானம் குறித்த வதந்திகளையும், அவற்றின் உண்மைத்தன்மைகளை இங்கே கொடுத்துள்ளோம்... 

மக்களை ரத்த தானம் செலுத்துவதற்காக ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் தினமும் சுமார் 12 ஆயிரம் பேர் போதிய ரத்தம் பெற முடியாததால் உயிரிழப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ரத்த தானம் என்பது சமூகத்தில் மிக முக்கியமானது, ஒரு யூனிட் ரத்தம் கொடை தருவதன் மூலமாக சுமார் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும், ரத்தத்தை ப்ளேட்லெட், ப்ளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவற்றைப் பிரித்தும் கொடை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்தத் தரவுகள் இவ்வாறு இருக்க, மக்களுள் பலரும் பல்வேறு வதந்திகள் காரணமாக ரத்த தானம் மேற்கொள்ள மறுக்கும் சூழலும் உருவாகிறது. ரத்த தானம் குறித்த வதந்திகளையும், அவற்றின் உண்மைத்தன்மைகளை இங்கே கொடுத்துள்ளோம்... 

1. உடலைப் பலவீனமாக்குகிறது

ரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமாகிறது என்பதைப் பலரும் நம்புகின்றனர். 

உண்மைத்தன்மை: ரத்த தானம் மேற்கொண்ட பிறகு உடல் பலவீனமடைவதில்லை. மேலும், ஒரு பிண்ட் ரத்தம் மட்டுமே கொடையாக எடுக்கப்படுகிறது. சராசரியாக மனித உடலில் சுமார் 10 முதல் 12 பிண்ட் வரையிலான ரத்தம் இருக்கும். மேலும், கொடை மேற்கொண்ட பிறகு, ரத்தம் மீண்டும் உற்பத்தியாகும். ரத்த தானம் மேற்கொள்வதற்கு முன்பும், பின்பும் போதிய ஆரோக்கியமான உணவு, நீர்ச்சத்து முதலானவற்றை உட்கொள்வது சிறந்தது. 

ரத்த தானம் பற்றி மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும், அவற்றின் உண்மைத்தன்மையும்!

2. ரத்த தானம் வலிமிக்கது

ரத்த தானம் செய்யும் போது வலி ஏற்பட்டு, நீண்ட நாள்கள் நீடிக்கும் என்று மூடநம்பிக்கை ஒன்றுண்டு. 

உண்மைத்தன்மை: ரத்த நாளங்களில் ஊசியை ஏற்றும்போது தவிர வேறு எந்த வலியும் ரத்த தானத்தால் ஏற்படுவதில்லை. ஊசியால் ஏற்படும் வலியும் இரண்டு நாள்களுக்குள் ஆறிவிடும். 

3. புகைப்பிடிப்பவர்களால் ரத்தம் கொடை அளிக்க முடியாது

புகைப்பிடிப்பதைப் பழக்கமாகக் கொண்டவர்கள் ரத்த தானம் அளிக்க முடியாது என நம்பப்படுகிறது. 

உண்மைத்தன்மை: ஒருவர் 18 வயதைக் கடந்தவராக இருந்து, புகைபிடிப்பவராக இருந்தாலும் அவரால் ரத்த தானம் வழங்க முடியும். ரத்த தானம் கொடுப்பதற்கும் கொடுத்த பிறகும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை புகைப்பிடிப்பதையும், 24 மணி நேரங்களை வரை மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். கொடையாக அளிக்கும் ரத்தம் சிகிச்சையில் இருக்கும் நபரின் உடலுக்குச் செல்வதால், ரத்த தானம் மேற்கொள்ள விரும்புபவர்கள் புகைப்பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. 

4. மெலிந்த தேகம் கொண்டவர்களால் ரத்த தானம் அளிக்க முடியாது

மெலிந்த தேகம் கொண்டவர்கள் ரத்த தானம் அளிக்க முடியாது என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. 

ரத்த தானம் பற்றி மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும், அவற்றின் உண்மைத்தன்மையும்!

உண்மைத்தன்மை: ரத்தக் கொடையாளரின் தகுதியை அவரது உடல்வாகு தீர்மானிப்பதில்லை. குறைந்தபட்சம் 45 கிலோ எடை கொண்டவராக ரத்தக் கொடையாளர் இருக்க வேண்டும். எனவே ஒல்லியாக இருப்பவர்கள் ரத்த தானம் அளிக்க கூடாது என்பதில் உண்மை இல்லை. மேலும், உடல் எடைக்கும் மனித உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தின் அளவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. 

5. ரத்த தானம் நோய்த் தொற்றை உருவாக்குகிறது

ரத்த தானம் காரணமாக ஹெச்.ஐ.வி முதலான நோய்த் தொற்று ஏற்படுவதாகப் பலரும் நம்புகின்றனர். 

உண்மைத்தன்மை: ரத்த தானம் அளிக்கும் போது, புதிய ஊசி பயன்படுத்தபடுகிறதா என்பதை சோதிக்க வேண்டும். புதிய ஊசி பயன்படுத்தப்பட்டால், நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
‘அதிமுகவுடன் ரகசிய கூட்டணி, உள்ளடி வேலை’ காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
‘ரகசிய கூட்டணி, உள்ளடி வேலை’ காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Embed widget