Indian Currency: ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, மக்களுக்கு வாரிக் கொடுக்காதது ஏன்? ஆர்பிஐ விதிகள் சொல்வது என்ன?
Indian Currency: இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பின்பற்றும் விதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Indian Currency: இந்திய அரசாங்கம் அதிகப்படியான ரூபாய் நோட்டுகளை அச்சடிக்காதது ஏன்? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள்:
ஒவ்வொரு முறை பணத்தேவை ஏற்படும்போதும் ஒரு நோட்டு அச்சிடும் இயந்திரம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க அரசாங்கம் ஏன் அதிகப்படியான ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எப்போதாவது எழுந்திருக்கிறதா? அப்படி எழுந்து இருந்தால் அரசாங்கம் ஒரே நேரத்தில் எத்தனை ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்? ஏன் அதிகப்படியான நோட்டுகளை அச்சடித்து மக்களுக்கு வாரிக்கொடுக்கவில்லை? என்பது குறித்து இங்கே அறியலாம்.
ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ஆர்பிஐ:
நாட்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் உரிமை இந்திய ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே கொண்டுள்ளது இப்போது கேள்வி என்னவென்றால், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ரிசர்வ் வங்கியால் எத்தனை ரூபாய் நோட்டுகளை வேண்டுமானாலும் அச்சிட முடியுமா? ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தொடர்பான விதிகள் என்ன? என்பதாகும்.
விதிகள் என்ன?
முதலில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை எவ்வாறு அச்சிடுகிறது என்பதை அறியலாமா? எந்த நாடும் தனது விருப்பப்படி ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உண்மையில், ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு விதிகள் உள்ளன. ஒரு நாடு நிறைய பணத்தை அச்சிட்டால், அந்த ரூபாய் நோட்டுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், இதனால் பணவீக்கம் வானத்தை எட்டும்.
ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தொடர்பான விதிகள்
எந்த நாட்டிலும் அச்சிடப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அந்த நாட்டின் அரசாங்கம், மத்திய வங்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, நிதி பற்றாக்குறை மற்றும் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பல நாடுகளிலும் இந்தியாவைப் போலவே, எப்போது, எத்தனை ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் ரிசர்வ் வங்கி தீர்மானிக்கிறது.
ரிசர்வ் வங்கி எத்தனை நோட்டுகளை அச்சிட முடியும்?
குறைந்தபட்ச இருப்பு முறையின் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தீர்மானிக்கப்படுகிறது. இந்த முறை 1957 முதல் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கிக்கு எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ரிசர்வ் வங்கி நிதியில் வைத்திருக்க உரிமை உண்டு. இவ்வளவு சொத்துக்களை வைத்திருந்த பிறகும், அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தேவைக்கேற்ப ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியும். இந்தியாவில், ரூபாய் நோட்டுகள் நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. அதன்படி, மகாராஷ்டிராவின் நாசிக் அச்சகத்திலும், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் அச்சகத்திலும் அச்சிடப்படுகின்றன. இங்கு ரூபாய் நோட்டுகள் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மேற்பார்வையின் கீழ் அச்சிடப்படுகின்றன. இது தவிர, இந்தியாவில் வேறு இரண்டு அச்சகங்கள் கர்நாடகாவின் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தின் சல்போனியில் அமைந்துள்ளன.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

