மேலும் அறிய

Ritika Singh: ’மல்யுத்த வீரர்கள் நடத்தப்படுவது வெட்கக்கேடானது.’ - தொடர் போராட்டத்திற்கு நடிகை ரித்திகா சிங் ஆதரவு!

Ritika Singh: டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நடிகை ரித்திகா சிங் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நடிகை ரித்திகா சிங் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

நடிகை ரித்திகா சிங் ஆதரவு:

மல்யுத்த வீர, வீராங்களை தங்களுக்கு நீதி கிடைப்பதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு பல தரப்பிரர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை ரித்திகா சிங் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.

ரித்திகா சிங் ட்வீட் விவரம்:

”மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் நடத்தப்படுவதை கண்டால் வேதனையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. அவர்கள் எப்படியான துயர்மிகு மனநிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய கூட முடியவில்லை. உலக அரங்கில் விளையாட்டு வீரர்களான அவர்களுக்கும் மரியாதையும், மதிப்பும் மறுக்கப்படுள்ளது; மனிதாபிமானம் இன்றி நடத்தப்படுகிறார்கள்.

தங்கள் திறமையால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பிரதிபலிப்பவர்களை நாம் மரியாதோடு நடத்த வேண்டும். ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். அவர்களோடு நாம் உடன் நிற்க வேண்டும்.

அவர்களின் குரல்களை ஒடுக்குவது முறையானதல்ல; இது நம்மிடையே புரிதலின்மையே உருவாக்கும். இந்த பிரச்சனை வெகு விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.” என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Ritika Singh: ’மல்யுத்த வீரர்கள் நடத்தப்படுவது வெட்கக்கேடானது.’ - தொடர் போராட்டத்திற்கு நடிகை ரித்திகா சிங் ஆதரவு!

பிரச்சனை என்ன?

சர்வதேச மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம், மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, ஒரு மாதத்திற்க்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று டெல்லி போலீஸ் கூறியதால் ஹரித்துவாருக்கு போராட்டத்தை மாற்றினர். தொடர்ந்து பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பதக்கங்களை கங்கையில் வீச இன்று (30.05.2023) மாலை மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வருகை தந்தன. போராட்டம் நடத்திய வீராங்கனைகள் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிக்காக போராடுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கொடுமையானது என்ற கருத்துகள் பல தரப்பினரிடமிருந்தும் எழுந்து வருகிறது.

தொடர்ந்து போராடி வரும் வீராங்கனைகளுக்கு உரிய பதில் கிடைக்காததால், வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினோத் போகத் உள்ளிட்டோர் பதக்கங்களுடன் தரையில் அமர்ந்து கண்ணீர் வடித்து வருகின்றனர். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

5 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு - விவசாயிகள் உறுதி 

iஇந்த பிரச்சனைகளை தீர்க்க 5 நாள் அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் விவசாய சங்க தலைவர் நரேஷ் திகைத் வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து மல்யுத்த வீரர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டார். விவசாய சங்க தலைவர் விடுத்த கோரிக்கையை அடுத்து பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாள் அவகாசம் அளித்துள்ளனர். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
“தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
“தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget