World Book Day 2025 : கமல் முதல் வெற்றிமாறன் வரை...பிரபலங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
Celebrities Favourite Books : சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களின் பட்டியலைப் பார்க்கலாம்

உலக புத்தக தினம்
உலகம் முழுவதும் ஏப்ரல் 23 ஆம் தேதி சர்வதேச புத்தக தினம் கொண்டாடப் படுகிறது. புத்தக வாசிப்பு பழக்கத்தை இளைஞர்கள் முதல் முதியொர் வரை அறிவுறுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் இந்த நாளை ஒட்டி ஒருங்கிணைக்கப்படுகின்றன. வாசிப்பை தொடங்குவதற்கு வயது ஒரு தடையல்ல. அந்த வகையில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பரிந்துரைக்கும் சிறந்த புத்தகங்களின் பட்டியல் இதோ.
கமல்ஹாசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பல்வேறு புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார். கமல் பரிந்துரைத்தப் பின் இந்த புத்தகங்களுக்கு பரவலாக ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்
கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்
எஸ்தர் - வண்ணநிலவன்
புயலிலே ஒரு தோணி - பா சிங்காரம்
கூளமாதாரி - பெருமாள் முருகன்
பிளேக் - ஆல்ஃபர் காம்யு
அவமானம் - சாதத் ஹாசன் மண்டோ
தோ பரம்சிவன் எழுதிய அழகர் கோயில், ரா கி ரெங்கராஜனின் ஆதிமயின் காதல் , மிகைல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம் , கி ராஜநாராயணன் எழுதிய கோபாலபுரத்து மக்கள் , A தில்லைராஜன் எழுதிய தொடுவானம் தேடி , ஜி நாகராஜன் எழுதிய நாளை மாற்றுமொரு நாளே, சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் , மனோகர் தேவதாஸ் மற்றும் தேனி சீருடையான் எழுதிய நிரங்களின் மொழி ஆகியவை கமல் பரிந்துரைக்கும் புத்தகங்கள்.
வெற்றிமாறன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
அலெக்ஸ் ஹேய்லி எழுதிய வேர்கள் ,
பெருமாள் முருகனின் "கங்கணம்"
சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல்
மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி
எம் கோபாலகிருஷ்ணன் எழுதிய மணல் கடிகை
இரச முருகவேல் எழுதிய முகிலினி ஆகியவை வெற்றிமாறன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
அரவிந்த் சாமி பரிந்துரைக்கும் புத்தகங்கள்
மார்கன் ஹவுசெல் எழுதிய சைக்காலஜி ஆஃப் மனி
அகதா கிரிஸ்டி நாவல்கள்
மிஸ்கின் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு
ராபர்ட் எம் பிர்சிக் எழுதிய ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும்
பிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம்
பா ரஞ்சித் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
காப்ரியல் கார்சியா மார்கெஸ் எழுதிய - தனிமையின் நூறு ஆண்டுகள்
ஒய் பி சத்யநாராயணன் எழுதிய - என் தந்தை பாலையா
ஜி கல்யாண ராவ் எழுதிய -தீண்டாத வசந்தம்





















