மேலும் அறிய

Director Atlee: அடுத்த தலைமுறைக்கு எது தவறு எனச் சொல்வது எனது கடமை - இயக்குநர் அட்லி

அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதைக் சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக் காட்சிகளை வைக்கின்றேன் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதைக் சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக் காட்சிகளை வைக்கின்றேன். ஒரு மருத்துவர் ஊசி போடும்போது நமக்கு வலிக்கத்தான் செய்யும் ஆனால் அது நமது உடலில் இருக்கும் நோயை குணப்படுத்த உதவுவதைப் போல் எனது படங்களில் அடுத்த தலைமுறையினருக்கு எது தவறு எனச் சொல்வதற்காகத்தான் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகளை நான் படமாக்குகின்றேன் என ஏபிபி நடத்திய ஐடியாஸ் ஆஃப் இந்தியா 3.O என்ற நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லி பேசியுள்ளார். 

மேலும் அவர், ஒரு சாதாரண மனிதன் 300 ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை பார்க்க வருகிறார். படம் மட்டும் இல்லாமல் அவர் வீட்டில் இருந்து திரையரங்கிற்கு வந்து செல்வதற்கு என மொத்தம் 6 மணி நேரம் ஆகின்றது. இந்த நேரத்திற்கும் அவர் செலுத்தும் 300 ரூபாய்க்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். 

நான் தமிழில் இயக்கிய நான்கு படங்களிலும் சரி, இந்தியில் இயக்கிய ஒரு படத்திலும் சரி இதைத்தான் கடைபிடித்துள்ளேன். நான் ஹாலிவுட் சினிமா உருவாக்கினால் கூட இதையேதான் கடைபிடிப்பேன். அடுத்த மூன்று ஆண்டுகளில் நான் ஹாலிவுட்டில் இருப்பதற்கான அறிவிப்புகள் வரும். 

எனது படங்களில் வன்முறைக் காட்சிகள் இருப்பதற்கு காரணம் எது தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான். விவசாயிகள் படும் கஷ்டத்தை நான் எனது படத்தில் காட்சிப் படுத்துகின்றேன் என்றால், அதனால் எதாவது மாற்றம் நிகழும் என்றால் மகிழ்ச்சிதான். ஒரு தவறை சுட்டிக்காட்டும் இடத்தில் நான் இருக்கின்றேன். கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கின்றார். நல்ல விஷயங்களை எனது படத்தின் மூலம் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன். அது நான் படம் இயக்குகின்றேன் எனது தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கின்றார் என்பதைக் காட்டிலும் முக்கியமானது என நான் நினைக்கின்றேன். இதன் காரணமாகத்தான் எனது படங்களில் அதிக சமூக கருத்துக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றேன். 

எதில்தான் அரசியல் இல்லை. எல்லாவற்றிலும் அரசியல் இருக்கின்றது. அரசியல் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கின்றது. அரசியல் கட்டாயம் பேச வேண்டும். அரசியல் பேசவில்லை என்றால் அது ஜனநாயகமாக இருக்க முடியாது. 

எனது படங்களில் கதாநாயகர்கள் சேவகர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அதாவது, கடவுளை காண நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும் பக்தன் இறுதியாக கடவுளைக் காணும்போது பக்திப் பரவசத்தில் காணப்படுவான். அதுபோல எனது கதையின் நாயகனைக் காணும்போது ரசிகர்கள் உணரவேண்டும் என நான் நினைக்கின்றேன்” இவ்வாறு அட்லீ பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget