![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Urfi Javed : மருத்துவமனை படுக்கையில் வைரல் நாயகி.. உடை சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆச்சு?
போட்டோ போட்டாலே ஆடை சர்ச்சைதான் என்று வாழ்ந்து வந்த உர்பி சமீபத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Urfi Javed : மருத்துவமனை படுக்கையில் வைரல் நாயகி.. உடை சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆச்சு? Urfi Javed Admitted to Hospital in Mumbai Urfi Javed : மருத்துவமனை படுக்கையில் வைரல் நாயகி.. உடை சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆச்சு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/9e6d7fefa2a48b6fd3a9429638392d371659880089_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகையான உர்ஃபி ஜாவித், இந்தி பிக் பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் வித்தியாசமான உடை அணிவதற்கு பிரபலமானவர். அவர் ஆடையை கிழித்து அணிகிறார் என ஒவ்வொரு முறையும் புகைப்படத்தை பதிவிடும் பலரும் கிண்டல் செய்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன் பெயர் குறிப்பிட முடியாத ஒருவர் என்னை பட வாய்ப்புக்காக தனிமையில் இருக்க அழைத்தார் என கூறி அதிர வைத்தார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட வெறும் பச்சை நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்திருந்தார். வித்தியாசமான ஆடையால் சில ஆடை வடிவமைப்பாளர்கள் தன்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை என்றும், என்னுடைய ஆடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்வதால் அவர்களுக்கு என்னை பிடிப்பதில்லை என உர்ஃபி ஜாவித் தெரிவித்திருந்தார்.
இப்படி போட்டோ போட்டாலே ஆடை சர்ச்சைதான் என்று வாழ்ந்து வந்த உர்பி சமீபத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ள போட்டோவைத்தான் அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ''இங்கு நிறைய நேரம் கிடைக்கிறது. உடல்நிலையை சரியாக கவனிக்காமல் இப்படி ஆகிவிட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன பிரச்னை காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்பதை அவர் குறிப்பிடவில்லை. விரைவில் குணமாகவேண்டுமென அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தை அதிர வைத்தது. ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலான முயற்சியை பாராட்டினாலும் மறுபுறம் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஆலியா பட், ராக்கி சாவந்த் ஆகியோர் ரன்வீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக மேலாடையின்றி தலைமுடியால் தனது உடலை மறைத்தபடி அதிதி புகைப்படங்களை வெளியிட்டார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)