‘தக் லைஃப்’ படத்தை கொண்டாடிய திருச்சி கமல் ரசிகர்கள்
தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி: நாயகன் படத்திற்கு பின்னர் நடிகர் கமல் – இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி உள்ள தக் லைப் படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தால் திருச்சியில் ரசிகர்கள் உற்சாகமாக காலை 9 மணி காட்சிக்கு வந்து குவிந்தனர்.
36 வருடங்களுக்கு பின்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், சிலம்பரசன், நடிகைகள் திரிஷா, அபிராமி , ஜஸ்வர்யா லெட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகா மாநிலம் தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று தக் ஃலைப் படம் இன்று வெளியாகி உள்ளது.
தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி சோனா மீனா திரையரங்கில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை கமல் ரசிகர்கள் மற்றும் திருச்சி கிழக்கு, மேற்கு மாவட்ட மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் திரைப்பட வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடினர் .மேலும் இது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் தரப்பில் கூறுகையில், இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும். கமலஹாசன் தன்னுடைய இளைய நடிகருக்கு மிகப்பெரும் வாய்ப்பு வழங்கியுள்ளார் எனவும் கமல் மேடையில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிடப்படும் என்ற நிலையில் அன்பு எப்பொழுதும் மன்னிப்பு கேட்காது என கமல் கூறி உள்ளார் அவர் கூறியது மிகவும் சரியானது இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றி அடையும். அப்போ நாயக்கரு... இப்போ தக்லைபு என தெரிவித்தனர்.
கர்நாடகாவில் மட்டும் இந்த படம் வெளியாகாத நிலையில் உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆவதை கமல் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்தனர். தஞ்சாவூரிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.





















