![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amudhavum Annalakshmiyum: அன்னத்தை தீர்த்துகட்ட உமா போடும் திட்டம்..இன்றைய சீரியலில் நடக்கப்போவது என்ன?
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அன்னம் குடும்பத்தை அழிக்க உமா திட்டம் போடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
![Amudhavum Annalakshmiyum: அன்னத்தை தீர்த்துகட்ட உமா போடும் திட்டம்..இன்றைய சீரியலில் நடக்கப்போவது என்ன? zee tamizh amudhavum annalakshmiyum serial today episode 186 highlights Amudhavum Annalakshmiyum: அன்னத்தை தீர்த்துகட்ட உமா போடும் திட்டம்..இன்றைய சீரியலில் நடக்கப்போவது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/9b0aa5081db7a52487ba1f2088dd35c81676103546187572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அன்னம் குடும்பத்தை அழிக்க உமா திட்டம் போடும் காட்சிகள் இடம் பெறுகிறது.
இதுவரை நடந்தது என்ன?
காலேஜில் எக்ஸாமிற்கு செந்தில் படித்துக் கொண்டிருக்கும் போது உமா ரவுடிகளை ஏவி அதனை கெடுக்க நினைக்கிறார். அவர்களை எதிர்க்க செல்லும் செந்திலை தடுக்கும் அமுதா, அவனை செல்வாவுடன் அனுப்பி வைக்கிறார். மேலும் செல்வாவிடம், அவரை இரவு முழுவதும் தூங்காமல் படிக்க வைக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என சொல்லும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இடம் பெற்றது.
இன்றைய எபிசோட் அப்டேட்
இன்றைய எபிசோடில் செந்தில் மெதுவாக படிக்க பாட்டி அவன் கன்னத்தில் அறைகிறாள். இதனால் செந்தில் பயத்துடன் சத்தமாக படிக்கிறான். இதனையடுத்து செந்தில் படித்தபடியே தூங்கி விழ, பாட்டி அவனை அடித்து விட்டு படிக்க சொல்கிறார். பழனி உமாவிடம், நம்ம ஆள்களை விட்டு செந்தில் வீட்டுல பார்க்க சொன்னேன், அவன் வீட்டுலயே இல்லைன்னு சொல்றானுங்க, எங்க போய் படிக்கிறான்னு தெரியலையே என சொல்கிறாள். மேலும் அவன் வீட்டுல இருந்தா நாம ஏதாவது செய்வோம்னு அமுதா பிளான் பண்ணி அவனை எங்கயோ ரகசியமா வச்சு படிக்க வைக்குறா அதை முதல்ல கண்டுபிடிங்க என சொல்கிறாள்.
View this post on Instagram
பிறகு செல்வா செந்திலை காரில் அழைத்து வந்து,அமுதாவிடம் விட்டு செல்கிறார். இதனைத் தொடர்ந்து அமுதா செந்திலை கிளம்பி கோயிலுக்கு போக சொல்லி விட்டு, அன்னம், மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு பின்னாலேயே ஆட்டோவில் கிளம்பி போகிறார். அனைவரும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட உமா சிதம்பரத்திடம் செந்திலை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார். உடனே சிதம்பரம் இந்த மண் குதிரையை நம்பி இன்னும் மோசம் போகப் போறியா என அமுதாவிடம் கேட்கிறார். அதற்கு எனக்கு என் அப்புச்சி திரும்ப வேணும். அதுக்காக அவங்க கண்டிப்பா பாஸ் பண்ணுவாங்க, நீங்க எல்லாரும் பார்க்க தான் போறீங்க என அமுதா சவாலாக சொல்கிறாள்.
பிறகு கோவிலில் இருந்து செந்தில் வண்டியில் முன்னால் கிளம்பி செல்ல, அன்னம், மாணிக்கம், அமுதா ஆட்டோவில் கிளம்புகிறார்கள். இதனைப் பார்க்கும் உமா தனது ஆட்களிடம் ஆட்டோவை ஆக்ஸிடண்ட் பண்ணி விட்டுருங்க என சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)