Parijatham: இசையை மாட்டிவிட்ட ஸ்ரீஜா.. மன்னித்துவிட்ட சுபத்ரா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: இசையை ஸ்ரீஜா மாட்டிவிட்ட நிலையில், பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா குறித்த உண்மையை இசை ஆதாரத்துடன் நிரூபிக்க இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பழிசுமத்திய ஸ்ரீஜா:
அதாவது, வசமாக சிக்கிக்கொண்ட ஸ்ரீஜா நான் விஷால கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காக தான் இப்படி பண்ணேன். நான் பண்ணது தப்புன்னா இசை பண்ணதும் தப்பு தானே என பழி சுமத்துகிறாள்.
மன்னித்த சுபத்ரா:
பிறகு சுபத்ரா நீ பண்ணது தப்பு என விஷாலிடம் மன்னிப்பு கேட்க வைத்து, அவளும் மன்னிப்பு கேட்க பரவால்ல விடுங்கம்மா என விஷால் சொல்கிறான். பிறகு என்னதான் இருந்தாலும் இந்த வீட்டு மருமகளா போயிட்ட இனிமே ஒழுங்கா நடந்துக்க என்ற எச்சரிக்கையோடு சுபத்ரா ஸ்ரீஜாவை மன்னித்து விடுகிறார்.
திட்டம் போடும் ஸ்ரீஜா:
பிறகு சுபத்ராவும் அவரது கணவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, இசை பற்றி நான் தான் அன்னைக்கே சொன்னேனே அவ நல்லவ என இசைக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ரீஜா சிந்தாமணியிடம் ஒரு நாள் இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியும். அதனால தான் இசையே மாட்டி விட்ற மாதிரி பேசினேன் என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















