Karthigai Deepam: ஐசியு-வில் ரேவதி.. காளியம்மாள் வீட்டில் பதுங்கிய மாயா - கார்த்திகை தீபத்தில் இன்று
ரேவதியை மாயா துப்பாக்கியால் சுட்ட நிலையில், ஐசியு-வில் இருக்கும் ரேவதிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது அடுத்த கட்டத்திற்கு எட்டியுள்ளது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மாயாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
காளியம்மாள் வீட்டில் ஒளிந்த மாயா:
அதாவது, மாயா காளியம்மா வீட்டிற்குள் வந்து ஒளிந்து கொள்கிறாள். மறுபக்கம் ரேவதிக்கு துப்பாக்கிசூடு நடந்த விஷயம் அறிந்து பரமேஸ்வரி பாட்டி பதறியடித்து ஓடி வருகிறாள். சந்திரகலா நீங்க எதுக்கு வந்தீங்க? என்று தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள்.
ஆனால் சாமுண்டீஸ்வரி யாரும் எதிர்பாராத விதமாக விடு பார்த்துட்டு போகட்டும் என்று ரேவதியை பார்க்க அனுமதி அளிக்கிறாள். தொடர்ந்து ரேவதியை பார்த்து கண் கலங்கும் பாட்டி கோவிலுக்கு கிளம்பி வருகிறாள்.
கடவுளிடம் பிரார்த்தனை:
அங்கு கடவுளிடம் எப்படியாவது ரேவதியை காப்பாற்றிடு என்று வேண்டுகிறாள். அப்போது கோவில் கட்ட நிலம் தேவைப்படுவதாக பேச்சு கிளம்ப, பாட்டி தேவையான நிலத்தை தருவதாக வாக்கு கொடுக்கிறார்.
ரேவதிக்கு ஆபரேஷன்:
அடுத்து அங்கு வந்த முருக பக்தர் ஒருவர் என்னமா ஆச்சு? என்று விசாரித்து விபூதி கொடுக்க பாட்டி ICU-ல் கந்தசஷ்டி கவசம் பாடி ரேவதிக்கு விபூதி பூசி விடுகிறாள். தொடர்ந்து டாக்டர் ரேவதியை செக்கப் செய்து விட்டு உடனடியாக ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















