Karthigai Deepam: வெடிகுண்டுவிற்கு பதிலாக பூக்கள்... சிவனாண்டிக்கு பல்பு கொடுத்த கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நினைவுிடம் திறக்கும் இடத்தில், சிவனாண்டி வெடிகுண்டு வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
போனை எடுக்காத சந்திரகலா:
அதாவது, ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதால் சாமுண்டீஸ்வரி இந்த சிலை திறப்பு விழாவுக்கு கிளம்பி கொண்டிருக்க சந்திரகலாவும் உடன் கிளம்புகிறாள். இவர்கள் இருவரும் சிலை திறப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர சிவனாண்டி இவ எதுக்கு வந்தா? இவளுக்கு பாம் வச்சிருக்கிறது தெரியாதா என பதட்டம் அடைகிறான். சந்திரகலாவுக்கு போன் செய்ய அவள் போனை எடுக்காமல் இருக்கிறாள்.
அடுத்ததாக அமைச்சர் சகுந்தலா நினைவிடம் திறக்கும் இடத்திற்கு வர அவரை சாமுண்டீஸ்வரி வரவேற்கிறாள். பிறகு அமைச்சர் சிலையை திறக்க போகும் சமயத்தில் சாமுண்டீஸ்வரியை அழைக்கிறார். நீங்களும் வாங்க உங்க மாப்பிள்ளையும் நீங்களும் இந்த சிலையை திறந்து வைக்கணும்னு தான் ஆசைப்பட்டாரு என்று சொல்கிறார்.
சுமங்கலி பூஜைக்கு வந்த அமைச்சர்:
பிறகு ரிமோட் பட்டனை அழுத்த பாம் வெடிக்கும் என சிவனாண்டி எதிர்பார்க்க மலர்கள் தூவப்பட குழப்பம் அடைகின்றனர். பிறகு அங்கு வந்த கார்த்திக் இங்கு வைத்த பாமை எப்பயோ எடுத்தாச்சு என பல்பு கொடுக்கிறான். மேலும் அமைச்சர் அங்கிருந்து கிளம்ப அவரை அடுத்த நாள் வீட்டில் நடக்க உள்ள சுமங்கலி பூஜைக்கு வர சொல்கின்றனர்.
அடுத்த நாள் அமைச்சரும் சொன்னபடியே சுமங்கலி பூஜைக்கு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















