மேலும் அறிய

Ethirneechal: கோர்ட்டில் ஆஜரான ஜீவானந்தம்! பழி வாங்கத் தொடங்கும் குணசேகரன் - தர்ஷினி நிலை என்ன?

Ethirneechal: ஜீவானந்தம் மற்றும் பெண்கள் மீது பழியை போட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய குணசேகரன். தர்ஷினிக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் பதட்டத்தில் இருக்கும் ஈஸ்வரி. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 8) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஈஸ்வரியும், மற்ற பெண்களுக்கும் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த இடத்தில் பார்த்ததைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விசாரிக்க சென்ற போலீஸ் ஒருவர் வந்து அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை தான் என சொல்கிறார். கடைக்காரர் ஒருவர் வந்து இவர்கள் அனைவரும் வந்து விசாரித்து  சென்றதை பற்றி சொல்கிறார். ஜீவானந்தம் அவரின் வக்கீலுக்கு போன் செய்து வர சொல்கிறார். இன்ஸ்பெக்டர் மோசமாக பேசியதால் ஜீவானந்தத்திற்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் கைகலப்பு ஏற்படுகிறது.

 

Ethirneechal: கோர்ட்டில் ஆஜரான ஜீவானந்தம்! பழி வாங்கத் தொடங்கும் குணசேகரன் - தர்ஷினி நிலை என்ன?
சக்தியும், தர்ஷனும் பெண்கள் அனைவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியாமல் இப்படி இருக்க முடியாது. போய் தேடி பார்க்கலாம் என கிளம்புகிறார்கள். ஆனால் ஆதிரை எங்கே இருக்கிறார்கள் என தெரியாமல் எங்கே போய் தேட போகிறீர்கள் என கேட்கிறாள். பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆதிரை சென்று விசாலாட்சி அம்மாவை சாப்பிட கூப்பிடுகிறாள். ஆனால் அவளை திட்டி அனுப்பி விடுகிறார் விசாலாட்சி அம்மா.

போலீஸ் ஸ்டேஷனுக்கு குணசேகரன் வந்து ஆவேசப்பட்டு ஈஸ்வரியை திட்டுகிறார். ஜீவானந்தத்தை அனாவசியமாக பேசுகிறார். இன்ஸ்பெக்டரிடம் இவங்க எல்லாரும் தான் என்னோட பொண்ணை ஒளிச்சு வைச்சு இருக்காங்க. சொத்துக்காக இவளுங்கள கைக்குள்ள வைச்சுக்கிட்டு ஆடுறான் என சொல்கிறார் குணசேகரன். ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியையும் சேர்த்து வைத்து அவமான படுத்தி பேசுகிறார். ஜீவானந்தம் மனைவி இறந்ததற்கு குணசேகரன் தான் காரணம் என ஜனனி சொன்னதும் அவளை முறைக்கிறார் குணசேகரன்.
அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

ப்ரோமோ:

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஈஸ்வரியையும் மற்ற பெண்களையும் பழிவாங்கியே தீர வேண்டும் என்ற வெறியில் இருக்கும் குணசேகரன் "என்னோட குடும்பம் என நினச்சு இவளுங்களை விட்டுடாதீங்க. இவளுங்க எல்லாரும் சேர்ந்து தான் இந்த வேலையை பண்ணியிருக்காளுங்க" என சொல்லி அனைவரின் மீதும் பழியை போடுகிறார் குணசேகரன். அவர் அநியாயமாக பேசுவதை கேட்டு நான்கு பெண்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

 

Ethirneechal: கோர்ட்டில் ஆஜரான ஜீவானந்தம்! பழி வாங்கத் தொடங்கும் குணசேகரன் - தர்ஷினி நிலை என்ன?
ஜீவானந்தம் மற்றும் பெண்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறார்கள். அங்கே வந்த ஜீவானந்தம் வக்கீல் "கோர்ட்டுக்கு கூட்டிட்டு வராங்க என்ற தகவல் வந்தது அதனால இங்க வந்தேன். என்ன ஆச்சு ஜீவானந்தம்" என கேட்க இன்ஸ்பெக்டர் வக்கீலை ஸ்டேஷனுக்கு வந்து பேச சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார். 

கோர்ட்டில் பெண்களை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்கள். எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதிக்கிறார். "காணாமல் போன அந்த பெண் குழந்தையின் நலனையும், அவள் தந்தையின் பரிதவிப்பையும் மனதில் கொண்டு போலீஸ் விசாரிக்க உத்தரவிட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்" என கேட்க நீதிபதியும் அதற்கு கையெழுத்துப்போட்டு கொடுக்கிறார். அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். 

 


காணாமல் போன தர்ஷினியின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. ஆனால் கதைக்களம் வேறு பக்கமாக திசை திரும்புகிறது. குணசேகரன் இவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே தர்ஷினியை அடியாள் வைத்து கடத்தி இருப்பாரோ என சந்தேகம் எழுகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட். 

ALSO READ | Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Embed widget