![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actor Marimuthu: ராதிகா, கிழக்கு வாசலில் நடிக்க கூப்பிட்டாங்க... எஸ்.ஏ.சி கதாபாத்திரம்...வருந்திய ‘எதிர்நீச்சல்’ குணசேகரன்!
“கிழக்கு வாசல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு தான் கிடைத்தது” - எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து
![Actor Marimuthu: ராதிகா, கிழக்கு வாசலில் நடிக்க கூப்பிட்டாங்க... எஸ்.ஏ.சி கதாபாத்திரம்...வருந்திய ‘எதிர்நீச்சல்’ குணசேகரன்! Sun tv Ethirneechal serial fame Marimuthu has denied acting in Vijay tv new serial Kizhakku vaasal for this reason Actor Marimuthu: ராதிகா, கிழக்கு வாசலில் நடிக்க கூப்பிட்டாங்க... எஸ்.ஏ.சி கதாபாத்திரம்...வருந்திய ‘எதிர்நீச்சல்’ குணசேகரன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/cb9e96b4f7f048fe51aaf27ad595de011689151907766224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடராக மட்டுமின்றி டி.ஆர்.பி ரேட்டிங்கின் படி முன்னிலையில் இருக்கும் எதிர் நீச்சல் தொடரின் நாயகனாக குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வரும் நடிகர் மாரிமுத்துவுக்கு, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பல சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. ஒரு நெகடிவ் கதாபாத்திரம் என்றாலும் அவரின் முத்திரை பதிக்கப்பட்ட "இந்தம்மா ஏய்!" வசனம், உடல் மொழி இவற்றுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகர் மாரிமுத்து நடிகராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள மாரிமுத்து, எதிர் நீச்சல் சீரியல் மூலம் உலகளவில் பிரபலமாகி விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசுகையில் "விஜய் டிவியில் ராதிகா சரத்குமார் தயாரித்து நடிக்கும் 'கிழக்கு வாசல்' தொடரில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்taது. குடும்பp பாங்கான கதை, மிகவும் வெயிட்டேஜ் உள்ள கதாபாத்திரம் என சொல்லி அழைப்பு வந்தது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சமயத்தில் ராதிகா மேடம் வந்து அழைத்த போதிலும் என்னால் அவரின் ஆஃபரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் தான் அந்த வாய்ப்பு எஸ்.ஏ. சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது.
எதிர் நீச்சல் தொடர் சுமார் 1500 எபிசோட் வரை ஒளிபரப்பாகும் எனth தெரிவித்துள்ளனர். வேற சீரியலில் நிச்சயமாக நடிப்பேன் ஆனால் எதிர்நீச்சல் முடியும் வரை வேறு எந்த சீரியலிலும் கமிட்டாக முடியாது. ஷூட்டிங் மற்றும் டப்பிங் சென்று வரவே இரவு 1 மணி ஆகிவிடுகிறது. கிழக்கு வாசல் வாய்ப்பை இழந்தது கொஞ்சம் கவலையாக இருந்தாலும், என்னுடைய சூழ்நிலை அப்படி இருந்தது" என்று பேசியுள்ளார் நடிகர் மாரிமுத்து.
விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மெகா தொடர் 'கிழக்கு வாசல்'. ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலில் ராதிகா சரத்குமார், எஸ்.ஏ. சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட், ஆனந்த்பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடங்கும் நாள் நேரம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)