Karthigai Deepam: துப்பாக்கியை தூக்கிய சாமுண்டீஸ்வரி! உயிர் பயத்தில் சிவனாண்டி!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப் போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் பெயரை கெடுக்க திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மாயாவின் ப்ளான்:
அதாவது, மாயா மகேஷை கூப்பிட்டு எல்லார் வீட்டு சுவரிலும் கார்த்திக் லவ்ஸ் ரேவதினு எழுதி வச்சிட்டு வா.. சாமுண்டேஸ்வரி அந்த ட்ரைவரை வீட்டை விட்டு வெளியே துரத்திடுவா என்று ஐடியா கொடுக்கிறாள்.
இதை கேட்டு மஹேஷும் சூப்பர் ஐடியா என்று சொல்லி அப்படியே எழுதி வைத்து விட்டு வருகிறான். சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு அருகிலும் இதே போல் எழுதி இருக்க அடுத்த நாள் காலையில் இதை பார்த்த சாமுண்டேஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
துப்பாக்கியுடன் சாமுண்டீஸ்வரி:
சந்திரகலா கார்த்திக்கோட வேலை தான் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி என் பொண்ணு மேலயும் ட்ரைவர் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. இதெல்லாம் யாரோட வேலைனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் அந்த சிவனாண்டி தான் பண்ணி இருப்பான் என்று துப்பாக்கியை எடுத்து கொண்டு கோபமாக கிளம்பி வருகிறாள்.
சிவனாண்டி வீட்டிற்கு வந்த சாமுண்டேஸ்வரி ஏய் சிவனாண்டி என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த இப்படியெல்லாம் செய்வ.. அசிங்கமா இல்லையா என்று ஆவேசப்பட சிவனாண்டி உன் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தணும் என்பது தான் என்னுடைய எண்ணம். அதுக்காக இப்படியெல்லாம் கேவலமாக நடந்துக்க மாட்டேன், கல்யாணத்தை நிறுத்த ஆயிரம் வழி இருக்கு என்று பதிலடி கொடுக்கிறான்.
ஒட்டுக்கேட்டுகும் மாயா:
இவர்கள் இருவரும் பேசுவதையெல்லாம் மாயா தூரத்தில் நின்று ஒட்டு கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

