மேலும் அறிய

Ethir neechal July 21 episode : குணசேகரன் லட்சணத்தை புட்டு வைத்த ஜீவானந்தம்... புத்தி பேதலித்த கதிர் ... நேற்றைய எதிர்நீச்சல் தொடர்

* ஜீவனாந்தத்திடன் யாருடைய பாட்சாவும் பலிக்கவில்லை.* அமைதியா இருந்தா மிஞ்சின சொத்து விவகாரம் சொல்வேன் இல்லை என்றால் தெரியாமலேயே செத்து போ என்கிறார் ஜீவானந்தம் இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் 

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய  எபிசோட் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

குணசேகரன், ஜனனி மற்றும் அனைவரையும் மீட்டிங் ரூமில் ஜீவானந்தத்தை சந்திப்பதற்காக கோபத்துடன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஜீவானந்தம் உள்ளே வர அடியாட்களும் கூடவே உள்ளே வருகிறார்கள். "சரியான திருடன் தான் நீ, வீட்டில் யாரும் இல்லாத நேரமா பார்த்து எங்க அப்பத்தாவோட கைரேகையை எடுத்து என்னோட எல்லா சொத்தையும் அபகரிக்கலாம் என பிளான் பண்றியா?" என குணசேகரன் கேட்க "திருடன் கிட்ட இருந்து திருடுறது தப்பு இல்ல என நினைக்குறேன்" என ஜீவானந்தம் சொல்கிறார். 

Ethir neechal July 21 episode : குணசேகரன் லட்சணத்தை புட்டு வைத்த ஜீவானந்தம்... புத்தி பேதலித்த கதிர் ... நேற்றைய எதிர்நீச்சல் தொடர்

கதிர் எகிற இப்படி 'எகிற வேலையெல்லாம் வைச்சுக்கிட்டு இருந்த செதச்சுருவேன்' என்கிறார் ஜீவானந்தம். நாலு அல்லக்கைகள், அடியாட்களை வைச்சுக்கிட்டு ரவுடி தனம் பண்றது நான் இல்லை. என்னோட மனசாட்சி என்ன சொல்லுதோ சமூகத்துக்கு எது நல்லதோ அதை தான் நான் செய்வேன் என்கிறார் ஜீவானந்தம். "அடுத்தவன் சொத்தை ஏமாத்தி செய்ய சொல்லுச்சா உன்னோட மனசாட்சி" என்கிறார் குணசேகரன். இது என்னோட இடம் இங்க கத்துறத நான் அனுமதிக்கமாட்டேன் என்கிறார் ஜீவானந்தம். 

 

Ethir neechal July 21 episode : குணசேகரன் லட்சணத்தை புட்டு வைத்த ஜீவானந்தம்... புத்தி பேதலித்த கதிர் ... நேற்றைய எதிர்நீச்சல் தொடர்

எங்க அப்பத்தாவுக்கு நீ சொந்தமா என ஞானம் கேட்கிறான். "சொந்தம் எல்லாம் இல்லை ஆனால் அந்த 40 % சொத்து என்னுடையது. வெளியே பெரிய மனுஷன் போல வேஷம் போட்டுக்கிட்டு வீட்டில பொம்பளைங்கள அடிமையா வைச்சுக்கிட்டு இருக்க உன்ன போல ஆளை எல்லாம் விட்டு வைக்கவே கூடாது" என்கிறார் ஜீவானந்தம்.  நீங்க செய்யுறது சட்டத்திற்கு எதிரான விஷயம். எந்த உரிமையல நீங்க உள்ள வந்தீங்க? அப்பத்தா கைரேகையை எடுத்த தைரியமா? என்கிறாள் ஜனனி. நீ தான் ஜனனியா மா? பாய்ண்ட்டா பேசுவியாமே. உங்க குடும்பத்தில் இருக்கிறவங்க கிட்ட சொல்லி அமைதியா பேச சொல்லு இல்ல சல்லி தனத்தை காமிச்சா அவ்வளவு தான் என்கிறார் ஜீவானந்தம். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன் என அடிக்கடி சொல்றீயே எத்தனை பேரை ஏமாற்றி, தலைமேல் ஏறி இந்த இடத்துக்கு வந்து அதற்கு பிறகு என்னவெல்லாம் செய்த என்பது எங்களுக்கு தெரிஞ்சதால தான் இங்க வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த கம்பெனி வரலாறு கூட எங்களுக்கு தெரியும் என ஜீவானந்தம் கூறுகிறார். பேச்சு முத்தி போக கதிர் எழுந்து ரகளை செய்ய ஆரம்பிக்கிறான். அது கைகலப்பில் போய் முடிகிறது. எவ்வளவு சொல்லியும் நிறுத்தத்தால் துப்பாக்கியை எடுத்து மேலே சுடுகிறார் ஜீவானந்தம். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இங்க பாரு குணசேகரன் பத்து நிமிஷம் உனக்கு டைம் தரேன் வெளியில அமைதியா வந்தனா உனக்கு மிஞ்சின சொத்து விவரம் தெரியும் இல்லை என்றால் எதுவுமே தெரியாமல் செத்து போயிடுவ. வெறி பிடித்த மாதிரி கதிர் எல்லாத்தையும் உடைகிறான். சிலை போல குணசேகரன் நிற்கிறார். 


வீட்டில் ஜனனியின் நிலையை பற்றி புலம்புகிறாள் நந்தினி. ஈஸ்வரி அங்க என்ன நிலை என்று தெரியாமல் அங்க போக முடியாது. அங்க ஏதாவது பிரச்சனை என்றால் சக்தியும், ஜனனியும் போன் பண்ணுவாங்க. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்கிறாள் ஈஸ்வரி. அந்த நேரத்தில் கரிகாலன் வந்து வா நம்ம எதிர்காலத்தை பத்தி பேசலாம் ஆதிரை என அழைக்கிறான். அவனை திட்டிவிட்டு சென்று விடுகிறாள் ஆதிரை. நந்தினி அவனை அழைத்து நடக்கும் பிரச்சனை பற்றி பேசுகிறாள். 

Ethir neechal July 21 episode : குணசேகரன் லட்சணத்தை புட்டு வைத்த ஜீவானந்தம்... புத்தி பேதலித்த கதிர் ... நேற்றைய எதிர்நீச்சல் தொடர்

குணசேகரனுடன் அனைவரும் வெளியே வருகிறார்கள். ஜீவானந்தம்  பேசிய வார்த்தைகள் குணசேகரன் காதுகளில் எதிரொலிக்கிறது. என்னோட சொத்துல எனக்கு என்ன பங்கு இருக்கு அவன் சொல்ல போறானாம். இந்த கம்பெனி மட்டும் இல்ல எல்லா சொத்துலையும் அவன் பங்கு கேட்க போகிறான் என புலம்புகிறார். "அப்பத்தாவின் ஷேர் 75 % சொத்தில் பங்கு இருக்கு. இவர் உணர்ச்சிவசப்பட்டு 40% ஷேர் அப்பத்தாவுக்கு கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கார்.  ஐந்து ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கின சொத்தில் தான் பங்கு  இல்ல என ஆடிட்டர் சொல்கிறார். 


இது அனைத்துக்கும் ஜனனிக்கு சம்பந்தம் இருக்கு. வீட்டில நடக்குற எல்லா விஷயமும் அவனுக்கு எப்படி தெரியும் என இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் அங்கு ஜீவானந்தம் வருகிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.   

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: பணயக்கைதியான ரேவதி.. துப்பாக்கியுடன் உள்ளே வந்தது யார்? அனல் பறக்கும் கார்த்திகை தீபம்
Karthigai Deepam: பணயக்கைதியான ரேவதி.. துப்பாக்கியுடன் உள்ளே வந்தது யார்? அனல் பறக்கும் கார்த்திகை தீபம்
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
Karthigai Deepam: கருப்பு ஆட்டம் ஆடும் ராஜராஜன்.. பிரசவ வலியில் துடிக்கும் ரோகிணி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கருப்பு ஆட்டம் ஆடும் ராஜராஜன்.. பிரசவ வலியில் துடிக்கும் ரோகிணி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
Embed widget