Anna Serial: உண்மையை உடைத்த பாக்கியம்: பரணி கொடுத்த அதிர்ச்சி: அண்ணா சீரியல் அப்டேட்!
சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் வந்து அவளிடம் மன்னிப்பு கேட்க “நீங்க இன்னும் என்னை சௌந்தரபாண்டி மகளா தான் பாக்குறீங்க, இந்த வீட்டுல ஒருத்தியா பார்க்கல” என்று கோபப்படுகிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் பிறகு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி இசக்கியை அடித்த விஷயம் தெரிய வந்து எல்லோரும் பரணியிடம் கோபித்துக் கொண்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
அதாவது, வைகுண்டமும் அவரது மற்ற பெண்களும் இசக்கியை பார்க்க கிளம்பி வருகின்றனர். வைகுண்டம் “இவ்வளவு நடந்ததுக்கப்புறம் நீ எதுக்குமா அவன்கூட இருக்கணும்? கிளம்பி வா” என்று சொல்லிக் கூப்பிட பாக்கியம் “ஆமா கூட்டிட்டு போய்டுங்க, உன் புள்ள வந்து முத்து பாண்டிய கொன்னுடட்டும், அப்புறமா ஜெயிலுக்கு போயிடுவான், நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்” என்று சொல்கிறாள்.
பாக்கியம் இரண்டு குடும்பத்தின் நலனை வைத்துப் பேச, இவர்கள் “என்னதான் இருந்தாலும் முத்துப்பாண்டி உன் பையன் தானே? எப்படி விட்டுக் கொடுத்துடுவ?” என்று தப்பாக புரிந்து கொள்கின்றனர். பரணி “அண்ணே உனக்கு புள்ள இல்லையா? இரண்டு பேரும் அப்படித்தான் பேசுவீங்க?” என்று சொல்ல பாக்கியம் கோபப்படுகிறாள்.
அதாவது “பரணிய பத்தி தப்பா சொல்லாதீங்க, நானே இசக்கிக்கு ட்ரீட்மென்ட் பாக்க சொல்லியும் அவர் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்காமல் விடக்கூடாதுன்னு இசக்கியை கூட்டிட்டு போனாள். முத்துப்பாண்டி ஊர் ஜனங்க முன்னாடி இசக்கி கிட்ட மன்னிப்பு கேட்டதனாலதான் அவனை விட்டா” என்று நடந்த விஷயத்தை சொல்ல இவர்கள் பரணியை புரிந்து கொள்கின்றனர்.
மேலும் பாக்கியம் “நான் இசக்கிய என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க” என்று வழிய அனுப்பி வைக்க, எதிரே முத்துப்பாண்டி வர வைகுண்டம் “இன்னொரு முறை என் பொண்ணு மேல கைய வச்சா சண்முகம் வரமாட்டான், நானே உன் குரல் வளையை கடிச்சு துப்பிடுவேன்”
என வார்னிங் கொடுக்கிறார்.
பிறகு வீட்டுக்கு வர, பரணி சாப்பிடாமல் பெட்டில் படுத்து கண் கலங்கிக் கொண்டிருக்க, சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் வந்து அவளிடம் மன்னிப்பு கேட்க “நீங்க என்ன புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான் இன்னும் என்னை சௌந்தரபாண்டி மகளா தான் பாக்குறீங்க, இந்த வீட்டுல ஒருத்தியா பார்க்கல” என்று கோபப்படுகிறாள்.
பரணியின் கோபத்தை கண்டு மற்றவர்கள் வருத்தப்படுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்






















