Nethrun: ஷூட்டிங்கிலிருந்து வந்து பேம்பர்ஸ் மாத்திட்டு போவேன் – 15 பேம்பர்ஸ் மாத்துவோம்; நேத்ரன் மனைவி கண்ணீர்!
சீரியல்களில் நடித்து வந்த நேத்ரன் புற்றுநோய் பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இந்த நிலையில் தன்னுடைய கணவரின் இறுதி நாட்கள் குறித்து தீபா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேத்ரன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். பாவம் கணேசன், மன்னன் மகள், பாக்கியலட்சுமி, பொன்னி, மருதாணி, மகாலட்சுமி என்று பல சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி புற்றுநோய் பிரச்சனை காரணமாக நேத்ரன் உயிரிழந்தார்.
அவரது மறைவை தாங்கமுடியாமல் தவித்து வரும் அவரது மனைவி தீபா, தனது கணவருக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தனது பேட்டிகளில் பேசி வருகிறார். அதில் நேத்ரனுக்கு இதயத்தில் கோளாறு இருந்தது. அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அந்த பிரச்சனை சரியானது.
இதே போன்று தான் நேத்ரனுக்கு வயிறு வலி பிரச்சனை வந்த போது கூட, அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். மேலும் அது வாயு பிரச்சனையாக இருக்கும் என்று கருதி அதற்கு மட்டும் மருந்து மாத்திரை எடுத்தார். ஆனால், அந்த வலி சரியாகவில்லை. 4 வருடங்களாக அதனால் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் வலி அதிகமாகவே எங்களது கட்டாயத்திற்காக ஸ்கேன் பரிசோதனைக்கு வந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுத்த ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அப்போது போதுமான வசதி வாய்ப்பு இல்லை. இதனால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தோம். மேலும், வயிற்றில் ஆபரேஷனும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆபரேஷன் செய்யப்பட்டதில் தையல் பிரிந்து வயிற்றிலிருந்து ஏதோ திரவம் மாதிரி வெளியில் வர பின்னர் மீண்டும் அவருக்கு மருத்துவர் சிகிச்சையை தொடர்ந்தனர்.
ஒருவேளை அவர் வயிற்றில் வலி என சொன்ன போதே, சிகிச்சை எடுத்து ஸ்கேன் பரிசோதனை செய்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது. கீமோதெரபி செய்ய ஆரம்பித்த போது முதலில் நல்லா இருந்தார். அதன் பிறகு அவருக்கே தெரியாமல் மோஷன் - யூரின் போக துவங்கிவிட்டார். குறைந்தது 10 முதல் 15 பேம்பர்ஸ் வரையில் ஒரு நாளைக்கு மாற்றி விடுவேன். நானும், என்னுடைய பசங்களும் மாறி மாறி பார்த்துக் கொள்வோம். ஆனால், பசங்க மாற்றுவது அவருக்கு பிடிக்காது. அதனால், நான் ஷூட்டிங்கில் இருக்கும் போது பெர்மிஷன் கேட்டு தான் வந்து மாத்திட்டு போவேன் என்று கண் கலங்கியபடியே கூறியுள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















