மேலும் அறிய

Salman Khan House Firing Case: நடிகர் சல்மான் கான் வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை!

Salman Khan: ஏப்.14ஆம் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் நிகழ்த்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சல்மான் கான் (Salman Khan) வழக்கில் கைதானவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பைக் கிளப்பிய துப்பாக்கிச்சூடு

கடந்த ஏப்.14ஆம் தேதி பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் நிகழ்த்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ள சல்மான் கான் வீட்டருகே அதிகாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இரு நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி விட்டு தப்பிச் சென்றனர்.

சல்மான் கான் வீட்டருகே வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட நிலையில், இதில் உயிர்ச்சேதமோ, காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.  தொடர்ந்து சிசி டிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததை அடுத்து, குஜராத் மாநிலம், பூஜ் பகுதியில், விக்கி குப்தா, சாகர் பால் எனும் இந்த இரு நபர்களை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.  தொடர்ந்து இந்த இருவருக்கும் துப்ப்பாக்கிகள் சப்ளை செய்ததாக அனுஜ் தாபன், சோனு சந்தர் எனும் இருவரும் கைது செய்யப்பட்டு நால்வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

உயிரிழந்த விசாரணைக் கைதி

விசாரணைக் கைதிகளாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், இன்று இவர்களில் அனுஜ் தாபன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். மும்பை சிறப்புப் பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ் தாபன் தற்கொலை முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பஞ்சாப்பைச் சேர்ந்த நிழல் உலக தாதாவும் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் பிரபல ரவுடியுமான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய் முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சல்மான் கான் வீட்டின் முன் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் தற்கொலை முயற்சியால் உயிரிழந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. அப்படி தற்கொலை எண்ணங்களும், மன அழுத்த எண்ணங்களும் மேலோங்கினால், அவற்றிலிருந்து விடுபட கீழ்க்காணும் எண்ணுக்கு எங்களை அழைத்து உதவி பெறவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
TN Headlines:அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
TN Headlines: அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
Embed widget