மேலும் அறிய

Rashmika Mandanna : ‘கேமராவை தாண்டி என்னால நடிக்க முடியாது’ - மேடையில் நொந்து பேசிய ராஷ்மிகா மந்தனா!

“அனைவரும் என்னை பார்க்கிறார்கள் என்பதற்காக என்னால் கேமராவை தாண்டி நடிக்க முடியாது” என ராஷ்மிகா மன உறுதியுடன் பேசியுள்ளார்

கன்னட சினிமாவில் கால் பதித்து அதன் பின் பக்கத்து மாநிலத்தின் டோலிவுட் சினிமாவிற்கு பறந்து சென்றவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவரகொண்டா முதல் விஜய் வரை பல பெரிய நட்சத்திரங்களுக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். இவர் தன் சினிமா வாழ்க்கையை துவங்கிய காலகட்டத்தில், இவரை பல இளைஞர்கள் “நேஷனல் க்ரஷ்” என்ற பட்டத்தோடு சேர்த்து தங்களின் மனதையும் ராஷ்மிகாவிற்கு சமர்பித்தனர்.

ராஷ்மிகாவும் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் சமயத்தில்,அவரின் சில நடைமுறையையும் உடல் மொழியையும் பலர் ட்ரோல் செய்து வந்தனர். பொதுவாக பாசிட்டிவான விஷயங்களை விட, நெகட்டிவான விஷயங்கள்தான் சீக்கரமாக பரவும் என்று சொல்வார்கள். 

அதற்கு ஏற்றவாறு, ராஷ்மிகாவின் விஷயத்திலும், இது நடந்து அந்த கருத்தை நிரூபித்தது. எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமாக இருந்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு கஷ்டங்களையும் சந்தித்தார் ராஷ். இவர் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும், விடாது கருப்பு போல், ட்ரோல்களும் நெகட்டிவிட்டியும் இவரின் வாழ்க்கையை சூழ்ந்தது.


Rashmika Mandanna : ‘கேமராவை தாண்டி என்னால நடிக்க முடியாது’ - மேடையில் நொந்து பேசிய ராஷ்மிகா மந்தனா!

முன்னதாக ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதல் கொண்ட இவர், அக்காதலை திருமணம் வரை எடுத்து சென்று, அந்த உறவை முறித்த விஷயமும் இவருக்கு அவப்பெயரை கொடுத்தது. சினிமாவில் மென்மேலும் வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக, திருமணத்தை நிறுத்தியவர் ராஷ்மிகா என்ற கருத்தும் நிலவி வந்தது. ஒருகட்டத்தில், இவை அனைத்தையும் சகித்து கொள்ள முடியாத ராஷ்மிகா, வெறுப்பை உமிழும் அளவிற்கு என்ன செய்து விட்டேன்... என பெரிய ஒரு கட்டுரையை தனி இன்ஸ்டா போஸ்டாக  பதிவிட்டு அவரின் மனக்கஷ்டத்தை மொத்தமாக கொட்டித்தீர்த்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

பின்னர், ரக்‌ஷித் ஷெட்டியுடன் நடித்த படத்தை பற்றி பேசிய இவர், அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை சொல்ல மறுத்தார்.இதனால், அவரது படம் கன்னடத்தில் தடை செய்யப்படும் என்று கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.

சமீபத்தில் ரக்‌ஷித் ஷெட்டியின் நெருங்கிய நண்பர் மற்றும் காந்தாரா படத்தின் ஹீரோவான ரிஷப் ஷெட்டி, ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம்,  சமந்தா, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரில் யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. இந்த பிரபலங்களுடம் நான் பணியாற்ற விரும்பவில்லை என ரிஷப் பதில் தெரிவித்திருந்தார். ஆனால் சாய் பல்லவி மற்றும் சமந்தாவின் வேலையைப் பாராட்டியிருந்தார். ராஷ்மிகாவின் பெயரை தவிர்த்ததன் மூலம் அவரது கருத்துக்கு ரிஷப் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. 


Rashmika Mandanna : ‘கேமராவை தாண்டி என்னால நடிக்க முடியாது’ - மேடையில் நொந்து பேசிய ராஷ்மிகா மந்தனா!

தற்போது மீண்டும் பேட்டி கொடுத்துள்ள ராஷ்மிகா,  “நான் நானாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய பண்பு. அனைவரும் என்னை பார்க்கிறார்கள் என்பதற்காக என்னால் கேமராவை தாண்டி நடிக்க முடியாது. என்னை போல் இருப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மனநிறைவாக உள்ளது.” என்று பேசியுள்ளார்.

அதுபோக, மேடை நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா பேசும்போது, "எனக்கு சினிமா பின்னணி கிடையாது. நானாகவே வளர்ந்து இங்கு நிற்கிறேன். என் வீட்டில் உள்ள குடும்பத்தினருடன் நான் போராடியுள்ளேன். ஒரு பெண்ணாக சினிமா துறையில் நீடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். "

எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் போல் பளிச் பளிச் பதிலடி கொடுத்து வருகிறார் ராஷ்மிகா. எதிர்மறை கருத்துக்கள் அனைத்தையும் ஓரமாக தள்ளிவிட்டு, புஷ்பா முதல் பாகத்தின் ரஷ்யா ரிலீஸிற்காக, அந்நாட்டிற்கு  அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் சுகுமாருடன் சென்றுள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget