Raju Srivastava Health: மூளை சாவு அடைந்ததாக கூறப்பட்ட பாலிவுட் பிரபலத்திற்கு சுயநினைவு திரும்பியது!
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவிற்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Raju Srivastava gained consciousness today after 15 days, he's being monitored by doctors at AIIMS Delhi. His health condition is improving: Garvit Narang, his Personal Secy
— ANI (@ANI) August 25, 2022
He was admitted here on Aug 10 after experiencing chest pain & collapsing while working out at the gym. pic.twitter.com/kmPfqRey1a
அந்த செய்தியில், ராஜூ ஸ்ரீவஸ்தவின் தனிச்செயலாளர் கார்விட் நரன், ராஜூ மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல காமெடியனாகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவ். இவர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில அவர் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வெளியே வந்து விட்டதாக தகவல் வெளியானது.
View this post on Instagram
இந்த நிலையில் அந்தத் தகவலை மறுத்த அவரது சகோதரர், அந்தத்தகவலில் உண்மை இல்லை. ராஜூ நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்” என்று பேசியிருந்தார். இதனிடையே அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து அவரது மூளைச்சாவு அடைந்து விட்டதாக தகவல் வெளியானது. அதனையும் மறுத்து வீடியோ வெளியிட்ட தீபு ஸ்ரீவஸ்தா, அதில் “அவர் ஒரு போராளி. இந்த போரில் வெற்றி பெற்று விரைவில் திரும்புவார். அதன்பின் ஒவ்வொருவரையும் காமெடியால் மகிழ்விப்பார்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.