மேலும் அறிய

'மெட்டுக்குள் அடங்கும் வரிகள் , மூன்று தலைமுறை கொண்டாடும் கவிஞர்' - பிறைசூடன் பிறந்தநாள் இன்று!

ஒரு பாடலின் வரிகளில் ஒரே அர்த்தம்  கொண்ட  சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் , அதே அர்த்தமுள்ள வேறு சொற்களை பயன்படுத்தும் தமிழின் வித்தை தெரிந்தவர்.

’மங்கலமான வரிகள் கொண்ட திரைப்பாடல்களும் இலக்கியமே ‘ என கூறிய , கம்பீர கவிஞர் பிறை சூடனின் பிறந்தநாள் இன்று. 1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே , தமிழ் மீதும் இலக்கியங்கள் மீதும் தீரா பற்று கொண்டவராக இருந்தவர். முதன் முதலாக  1985ஆம் ஆண்டு வெளியான சிறை என்னும் படத்தில் இடம்பெற்ற ,  ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னு பாடலை எழுதியதன் மூலம் புகழ்பெற்றவர். இந்த பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.  அதன் பிறகு இசைஞானியின் மெட்டுகளுக்கு அலங்காரம் செய்ய தொடங்கினார்.  அதன் பிறகு தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் தொடர்ந்து பணியாற்றினார். 

’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்னு பாடல்தான் இசைஞானிக்கு எழுதிய முதல் பாடல். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார். ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ என்னும் பாடல் இவரின் கவி எழுத்தின் வேகத்திற்கு ஒரு சான்று என்றால் மிகையில்லை. பட்டி தொட்டியெங்கும் இன்றும் திருமணங்களில் ஒலிக்கும்” நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் “ என்னும் பாடலை சொல்லலாம் .  “ புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும் , பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்..மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கனும் மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு...சொத்து வீடு வாசல் இருந்தாலும் சொந்த பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் உள்ளம் ரெண்டு ஒட்டாவிட்டால் கல்யாணம்தான் கசக்கும் “ என்னும்  அர்த்தமுள்ள வரிகளை கொடுத்தவர். அதுமட்டுமல்ல அமரன் திரைப்படத்தின் ‘வெத்தலை  போட்ட சோக்குல’,  ‘சந்திரனே சூரியனே’ போன்ற பாடல்கள் இன்றளவும் பிரபலம். 


மெட்டுக்குள் அடங்கும் வரிகள் , மூன்று தலைமுறை கொண்டாடும் கவிஞர்' - பிறைசூடன் பிறந்தநாள் இன்று!

இசையமைப்பாளர் ஒரு மெட்டமைத்து கொடுத்தால் , அந்த மெட்டுக்குள் அடங்கும் அழகான வரிகளை ஆழமான கருத்துகளோடும் , படத்தின் கதையோடு இயந்தவாரும் இசையமைப்பதில் கெட்டிக்காரர் பிறை சூடன். அதுமட்டுமல்ல , ஒரு பாடலின் வரிகளில் ஒரே அர்த்தம்  கொண்ட  சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் , அதே அர்த்தமுள்ள வேறு சொற்களை பயன்படுத்தும் வித்தை தெரிந்தவர்.

 


மெட்டுக்குள் அடங்கும் வரிகள் , மூன்று தலைமுறை கொண்டாடும் கவிஞர்' - பிறைசூடன் பிறந்தநாள் இன்று!

பிறை சூடனின்  இதுவரையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தவிர கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கு மேல் பக்தி பாடல்கள் , தொலைக்காட்சி தொடருக்கான பாடல்களையும் எழுதியுள்ளார்.  மூன்று முறை தமிழக அரசின் சிறந்த கவிஞருக்கான விருதை பெற்றுள்ளார். திரைப்பட சங்கம் இவரை ‘கலைச்செல்வம்’ என்ற விருதை வழங்கியும் கௌரவித்தது.

இலக்கிய ஞானம் அதிகம் உள்ளவர். பல சித்தர்களின் பாடல்களை எப்போது கேட்டாலும் அடி பிறழாமல் , தயக்கம் இல்லாமல் சொல்லும் திறமைக்காரர் .கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த பிறை சூடன் அவர்கள் தனது 65 வயதில் , கடந்த 2021 அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார். பிறை சூடன் என்றும் அவரின் கவி சூடிய பாடல்களால் எங்கும் நீக்கமர நிறைந்திருப்பார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kolai Seval Review : கலையரசன் நடித்துள்ள கொலைச்சேவல் பட விமர்சனம்
Kolai Seval Review : கலையரசன் நடித்துள்ள கொலைச்சேவல் பட விமர்சனம்
மாதம் ஒரு ரேஸ்...2027 வரை அஜித் பிஸி..அப்போ AK 64 படம் ?
மாதம் ஒரு ரேஸ்...2027 வரை அஜித் பிஸி..அப்போ AK 64 படம் ?
ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !
ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !
தமிழுக்கு அவமானம் ! வைரமுத்துவிற்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு
தமிழுக்கு அவமானம் ! வைரமுத்துவிற்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget