மேலும் அறிய

Khushbu Sundar: 80s வாட்ஸ் அப் குரூப்.. அதே துள்ளல்.. அதே அரட்டை.. குஷ்பு பகிர்ந்த சீக்ரெட்!!

தமிழ் திரையுலகில் 1980ம் ஆண்டுகளில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் 1980ம் ஆண்டுகளில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த சந்திப்பு அவர்களுக்குள் எவ்வளவு பிரபலமோ அதே அளவு ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இது குறித்து நடிகை குஷ்பு சிலாகித்துப் பேசியுள்ளார்.

80s நடிகர்களாகிய நாங்கள் எங்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளோம். அதில் தான் எங்கள் பழைய நினைவுகள், அனுபவங்களைப் பகிர்ந்து வாழ்கிறோம். 80s வாட்ஸ் அப் குரூப் எங்களை இணைத்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாங்கள் 100க்கணக்கான குறுந்தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். புகைப்படங்களைப் பகிர்கிறோம். இந்த குரூப்பில் சிரஞ்சீவி இல்லை. இருந்தாலும், நாங்கள் எல்லோரும் தொடர்பில் தான் இருக்கிறோம் என்று குஷ்பு கூறினார்.

அண்மையில் குஷ்பு நடிகர் சிரஞ்சீவியை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். அதைப் பற்றி கூறியபோதே சிரஞ்சீவி இவ்வாறாகக் கூறியுள்ளார்.

குஷ்பு கடைசியாக ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில் அவர் இன்னும் அதிகமாக நிறைய படங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறுகிறார்.


Khushbu Sundar: 80s வாட்ஸ் அப் குரூப்.. அதே துள்ளல்.. அதே அரட்டை.. குஷ்பு பகிர்ந்த சீக்ரெட்!!

இது குறித்து, நான் நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் நினைக்கும் மாதிரியான கேரக்டர்கள் வருவதில்லை. அண்ணாத்தே படத்தில் நடித்தது ஓர் அற்புதமான உணர்வு. 28 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி சாருடன் நடித்தேன். அவருடன் எப்போது நடித்தாலும் அது ஒரு படிப்பினை தான். அவர் வேலை செய்யும் அர்ப்பணிப்பில் கொஞ்சமும் மாறவில்லை. அவர் இன்று சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு சிறுவன் போல் உற்சாகமாக வருகிறார். அதுதான் அவரின் மாண்பு. அது தான் அவரை இவ்வளவு பெரிய ஆளாக மாற்றியுள்ளது.

நடிகை குஷ்பு 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்த அனுபவம் கொண்டவர். அது ஒரு அழகிய ரோலர் கோஸ்டர் அனுபவம் என்று கூறுகிறார். அந்தப் பயணம் மிகவும் இனிமையானது என்றும் நினைவுகூர்ந்தார். எனக்கு நல்ல இயக்குநர்கள் அமைந்தார்கள். எனக்கு அசாதரண திறமை கொண்ட நடிகர்கள் அமைந்தார்கள். இவை எல்லாம் எனது அதிர்ஷ்டம் என்றே நான் கருதுகிறேன். என் சினிமா பயணத்தில் ஏற்றத்தாழ்வு இருந்துள்ளது. ஆனால் நான் என்றுமே தோல்விகளை நினைத்து வருந்தியதில்லை. 

13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு. பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். அதனை தொடர்ந்து உச்சத்தை தொட்ட அவர், சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் அசத்தி வருகிறார் குஷ்பு.

தலைப்பு செய்திகள்

அம்மாவின் இறுதி சடங்கை முடித்து ஐரோப்பா சென்ற அஜித்..ரசிகர்கள் அதிருப்தி
அம்மாவின் இறுதி சடங்கை முடித்து ஐரோப்பா சென்ற அஜித்..ரசிகர்கள் அதிருப்தி
30 ஆண்டுகள் நீண்ட அவதூறு வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
30 ஆண்டுகள் நீண்ட அவதூறு வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Karuppu Ott Release : ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு...திரையரங்க வசூல் எவ்வளவு?
Karuppu Ott Release : ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு...திரையரங்க வசூல் எவ்வளவு?
ஜெயிலர் 2 பார்த்து அதிருப்தி...மீண்டும் 25 நாள் படப்பிடிப்பா ?
ஜெயிலர் 2 பார்த்து அதிருப்தி...மீண்டும் 25 நாள் படப்பிடிப்பா ?

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Embed widget